Posts

Image
இயக்குநீர்கள் (Hormones), ஏற்பிகள் (Receptors) மற்றும் இலக்கு உயிரணுக்கள் (Target Cells) மனித உடலில் சளி, எச்சில், வியர்வை அட்ரீனலின், பிட்யூட்ரின் போன்ற பலவகையான நீர்மங்கள் உற்பத்தியாகின்றன. இந்த நீர்மங்களை இயக்குநீர் (Hormones) நீர்மங்கள் , இயக்கு நீரல்லாத (non-hormones) நீர்மங்கள் என்று இருவகையாகப் பிரிக்கலாம். அவ்வாறு பிரித்து வகைப்படுத்தும் போது இயக்கு நீர் நீர்மங்கள், இயக்கு நீரல்லாத நீர்மங்களிடமிருந்து எந்த வகையில் வேறுபடுகின்றன என்பதை அறிவது மிகவும் முக்கியமானது. இயக்குநீர்கள் (Hormones), குருதி (blood) அல்லது உயிரணுப் புறப் பாய்மம் (extracellular fluid) வழியாக வேதியியல் தூதுவர் (chemical messengers) களாகச் செயலாற்றுகின்றன என்று சொல்லலாம். பெரும்பாலான இயக்குநீர்கள் நம்முடலில் குருதியோட்டத்துடன் சுற்றி வருகின்றன. இருப்பினும் ஒரு குறிப்பிட்ட இயக்குநீர் வரையறுக்கப்பட்ட உயிரணுக்களுடன் மட்டுமே செயல் விளைவை ஏற்படுத்தும். இந்த உயிரணுக்களை நாம் இலக்கு உயிரணுக்கள் (Target cells) என அழைக்கிறோம். இலக்கு உயிரணுக்கள் தம்மிடம் ஒரு குறிப்பிட்ட இயக்குநீருக்குரிய ஏற்பிகளை...

அச்சம் - கலீல் கிப்ரான்

Image
கடலைச் சேரும் முன் நதி அச்சத்துடன் நடுங்கியதாகக் கூறப்பட்டது. மலைச் சிகரங்களிலிருந்து தொடங்கி நீண்டு விரிந்த சாலைகள், குறுக்கிடும் வனங்கள், கிராமங்கள் என்று தான் கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்க்கிறாள் அந்தப்பெண். தன் முன் பெரிதாகப் பரந்து கிடக்கும் பெருங்கடலொன்றை அவளால் காணமுடிகிறது. அதற்குள் புகுவது என்பது நிரந்தரமாகக் காணாமல் போவதன்றி வேறில்லை. ஆனால் வேறு வழியில்லை. நதியால் திரும்பிப் போக இயலாது. யாருமே திரும்பிச் செல்லுதல் இயலாது. இருப்பில் திரும்பிச் செல்லுதல் இயலாத ஒன்று. பெருங்கடலுக்குள் புகுந்து விடும் இடரை நதி ஏற்றுக் கொள்ளவே வேண்டும். காரணம் அந்நிலையில் மட்டும்தான் அச்சம் அழிந்து போகும். ஏனென்றால் அந்த இடத்தில்தான் கடலில் காணாமல் போவது என்பதில்லை, கடலாகவே தான் மாறியதை நதியால் அறிய முடியும். கலீல் கிப்ரான் தமிழாக்கம் : வெ.சுப்ரமணியன்

இரு துறவிகள் - கலீல் கிப்ரான்

Image
தனித்த மலையொன்றில் துறவிகள் இருவர் இறைவனைத் தொழுதும் ஒருவரை ஒருவர் நேசித்தும் வாழ்ந்து வந்தனர். அவர்களின் உடைமையாக இருந்தது ஒரே ஒரு மண்ணாலான கிண்ணம் மட்டுமே. ஒருநாள் அவர்களில் வயது முதிர்ந்த துறவியின் நெஞ்சத்தில் ஒரு கெட்ட ஆவி உட்புகுந்து குடி கொண்டது. முதிய துறவி இளையவரிடம்,” நீண்ட நாட்களாக நாம் சேர்ந்து வாழ்ந்து வருகிறோம். நாம் இனிப் பிரிந்து வாழ வேண்டிய காலம் வந்து விட்டது. நம்மிடம்இருப்பதைப்  பிரித்துக் கொள்வோம்” என்றார். இது கேட்டு வருந்திய இளைய துறவி,” சகோதரரே, நீங்கள் என்னை விட்டுப் பிரியவே கூடாது. அவ்வாறு பிரிய வேண்டும் என்பது எனக்குத் துக்கத்தைத் தருகிறது. இருப்பினும் பிரிதல் உங்களுக்கு அவசியம் என்றால் அப்படியே நடக்கட்டும்” என்றவர் அந்த ஒற்றை மண்கிண்ணத்தை எடுத்து வந்து,” இதை இரண்டாகப் பிரித்தல் என்பது இயலாது என்பதால் இதனை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்”  என்றார். அதற்கு முதிய துறவி,”பிச்சை எல்லாம் எமக்குத் தேவையில்லை. எனக்குச் சொந்தமானதைத் தவிர வேறு எதையும் நான் ஏற்றுக் கொள்வதில்லை. கிண்ணம் பங்கு போடப்பட வேண்டும்”. இளைய துறவி,” இந்த மண்சட்டியை உடைப்பத...

மரணத்தின் அழகு - பகுதி (1) - கலீல் ஜிப்ரான்

Image
                                                                                                                     பகுதி (1) - அழைப்பு நான் உறங்கிக் கொள்ள வேண்டும், அன்புப் போதையேறிய என் ஆன்மாவிற்காக. நான் ஓய்வு எடுக்க வேண்டும், என் ஜீவன் பெற்ற அபரிமிதமான பகல் இரவுகளுக்காக. என் படுக்கையைச் சுற்றி மெழுகுவர்த்தி ஏற்றித் தூபமிடுங்கள், உடல் மீது மல்லியையும் ரோஜாவையும் தூவுங்கள்; என் கேசத்தைச் சாம்பிராணிப்புகையூட்டிப் பதப்படுத்தி, கால்களில் நறுமணத் திரவியம் தெளித்து, என் நெற்றியில் மரணம் தன் கரத்தால் என்ன எழுதியுள்ளதென்பதைப் படியுங்கள். நித்திரையின் கரங்களில் நான் ஓய்வெடுக்க வேண்டும், சோர்ந்து விட்ட என் திறந்த விழிகளுக்காக. வெள்ளித் தந்தி யாழ் துடித்து என் ஆன்மாவை அமைதிப்பட...

மரணத்தின் அழகு - பகுதி(2) - கலீல் ஜிப்ரான்

Image
                                                                                     பகுதி (2) மேலெழுதல் மலையுச்சி ஒன்றை நான் கடந்து விட்டேன் வான வெளியின் முழுமையான கட்டுப்பாடற்ற சுதந்திரத்தில் என் ஆன்மா உயரச் செல்கிறது. நான் வெகுதூரம் சென்று விட்டேன், என் தோழர்களே, என் கண்களிலிருந்து மலைகளை மேகங்கள் மறைக்கின்றன. பள்ளத்தாக்குகளில் நிசப்தம்  பெருங்கடல் வெள்ளமாய்ப் பாய, மறதியின் கரங்கள் சாலைகளையும் வீடுகளையும்  அணைத்துக் கொள்கின்றன. ஒரு வெண்ணுருத்தோற்றத்தின் பின்னே மறையும் புல்வெளிகளும், வயல்வெளிகளும் மெழுகுவர்த்தியின் மஞ்சள் ஒளியாய், அந்திப் பொழுதின் சிவப்புமாய்  வசந்தகால மேகம் போலத் தெரிகிறது. அலைகளின் பாடல்களும்,  நீரோடைகளின் கீர்த்தனங்களும்  சிதறிக் கிடக்கின்றன,  மொய்க்கும் குரல்கள் அடங்கி நிசப்தமாகிறது. ஆவியின் ...

கண்டதும் களித்ததும் - பகுதி 13 (புனே பயணக் கட்டுரைகள்)

Image
பர்வதிக் குன்றுகள் இருநூற்று எழுபது ஆண்டுகளுக்கும் மேலாகப் புனே நகரத்தின் கண்கவர் இடங்களில் ஒன்றாகத் திகழும் இடம் பார்வதி அல்லது பர்வ திக் குன்றுகள் (Parvati Hills).  நாம் பார்வதி என்றழைத்தாலும் உள்ளூர்வாசிகள் பெரும்பாலும் “பர்வதி” என்றே அழைக்கிறார்கள். ஒருவேளை பர்வதராஜ குமாரி என்பதால் பர்வதி என்கிறார்களோ என்னமோ? புனே நகரத்தை கிட்டத்தட்ட முழுமையாக ஒரே கண் வீச்சில் காண விரும்புபவர்களுக்குப் பார்வதிக் குன்றுகள் நல்லதோர் தேர்வாக அமையும் என்பதில் ஐயமில்லை. காரணம் புனே நகரின் இரண்டாவது மிக உயர்ந்த பகுதி இதுதான். கடல் மட்டத்திலிருந்து சுமார் 650 மீட்டர்   அல்லது 2400 அடி உயரத்தில் பார்வதி குன்றின் உச்சி அமைந்துள்ளது. சாலையிலிருந்து 103 படிகள் ஏறிச் செல்ல வேண்டும். படிகள் சரிந்த வாக்கில் மேலேறும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளன.  பர்வதிக் குன்றுக் கோவில் வளாகத்தில் ஆட்சி செலுத்தும் முதன்மைத் தெய்வமான பார்வதி தேவி நோய்களைக் குணப்படுத்தும் வல்லமை கொண்டவள் என்று சொல்லப்படுகிறது. 1740 ஆண்டில், கால் தொடர்பான நோயால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த நானாசாகேப் பேஷ்வாவின்...

கண்டதும் களித்ததும் - பகுதி - 12 (புனே பயணக் கட்டுரைகள்)

Image
                                            ஷிண்டே சத்ரி( Shinde Chhatri )                                             பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த மஹத்ஜி ஷிண்டே( Mahadji Shinde ) என்ற மராட்டிய படைத் தளபதிக்காகக் கட்டப்பட்ட நினைவுச் சின்னம் ஷிண்டே சத்ரி ( Shinde Chhatri ). இந்நினைவுச் சின்னம் புனே நகரின் அனைவராலும் நன்கு அறியப்பட்ட வான்வாடி( Wanwadi ) பகுதியில் அமைந்துள்ளது. புனே நகரத்தின் குறிப்பிடத்தக்கதோர் அடையாளமாகவும் மராட்டிய  ஆட்சியை நினைவூட்டும்  வகையிலும் ஷிண்டே சத்ரி அமைந்துள்ளது.                                                     மஹத்ஜி ஷிண்டேயின் உடல் தகனம் செய்யப்பட்டது 1794 ஆம் ஆண்டு பிப்ரவரி 12...

ஆராய்ச்சிகளில் எலிகளை அதிகம் பயன்படுத்துவது ஏன்?

Image
                                அன்றாடம் நாம் உண்ணும் உணவில் கிடைக்கப் பெறாத சத்துக்களின் குறைபாட்டை ஈடு செய்யும் பொருட்டுக் கூடுதலாக எடுத்துக் கொள்ளும்   ஊட்டச்சத்து  நிரப்பி  ( dietary  supplements)  மாத்திரைகள்  முதல்   கே ன்சருக்கான மருந்துகள்  வரை ,  நாள்தோறும் புதிதுபுதிதாகப் பல வகையான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன .    ஆய்வகங்களில் புதிய மருந்துகளைப் பரிசோதித்துப் பார்ப்பதிலாகட்டும் அல்லது பல வியப்பூட்டும் மருத்துவ கண்டுபிடிப்புகளிலாகட்டும் சுண்டெலிகளும் ( Mice ) எலிகளும் ( Rats ) மிக முக்கியமான பங்கை வகிக்கின்றன . உண்மையில் , உயிரிமருத்துவ ஆராய்ச்சி அறக்கட்டளை ( Foundation for Biomedical Research ) சுருக்கமாக எப் . பி . ஆர் ( FBR ) என்றழைக்கப்படும் நிறுவனத்தின் கூற்றுப்படி மேற்படி மருத்துவம் தொடர்பான ஆய்வகங்களில் பயன்படுத்தப்படும் விலங்குகளில் தொண்ணூற்றைந்து (95%) விழுக்காட்டு விலங்குகள் சுண்டெலிகளும் எலிகளும் தான் . அறிவியலாளர்களு...