Posts

நீர் பதுமராகம் - கதை (4) - லோகேஷ் ரகுராமன்

Image
 என்னுடைய பள்ளி வாழ்க்கை திருநெல்வேலி டயோசிசன் டிரஸ்ட்  அசோசியேஷன் (TDTA) நடத்தி வரும் பள்ளி ஒன்றில் தொடங்கியது. திருநெல்வேலி டவுண் பகுதியில் இருந்த அந்தப் பள்ளியின் பின்புறம் ஒரு வாய்க்கால் ஓடும்.‌ வாய்க்காலில் மிதந்து வரும் ஆகாயத்தாமரை செடிகளை எடுத்து வந்து கரும்பலகை (BLACK  BOARD) மற்றும் எங்களின் ஸ்லேட் (SLATE)முதலியவற்றைத் துடைப்போம்.‌ அப்படிச் சிறுவனாக இருக்கும் போதே எனக்கு அறிமுகமானதுதான்  நீர் பதுமராகம் என்ற நமக்கு நன்கு பரிச்சயமான ஆகாயத் தாமரை ( Water Hyacinth). இவற்றின் மலர்கள் ் வெளிர்  ஊதா, லாவெண்டர் மற்றும் இளம் சிவப்பு நிறங்களில் காணப்படுகின்றன. கிரேக்க தொன்மக் கதையில் இந்த நீர்த் தாவரம் உருவான செய்தி வருகிறது.  படம் - நீர் பதுமராகம்  தொன்மக் கதையைப்  படிக்க ஆரம்பித்ததும் ஆகா, இது ஒரு மாதிரியான கே (GAY) களமாக இருக்கும் போலிருக்கிறதே என்று நினைத்தேன். ஆனால் நல்ல வேளையாக கதை அந்தத் திசையில் பயணிக்கவில்லை.  ஹயாசிந்த் மலரின் கதை கிரேக்க தொன்மத்தில் ஆரம்பமாகிறது.‌ அந்த கிரேக்க தொன்மக் கதையில்  சூரியக் கடவுளான அப்பல்லோ (APOLLO) இ...

பாஞ்சஜன்யம் - கதை 3 - லோகேஷ் ரகுராமன்

Image
 லோகேஷ் ரகுராமனின் விஷ்ணு வந்தார் புத்தகத்தில் மூன்றாவது கதையாக வருகிறது. இது அரூ மின்னிதழில் பிரசுரமான சிறுகதை. இச் சிறுகதை குறித்த என் பார்வை முதலில் கதையை‌ படித்து விட்டு பின்னர் என்னுடைய கதை குறித்த கருத்தைப் படித்தால் நல்லது. கதை அரூ மின்னிதழில் பிரசுரமான ஒரு கதை.‌ முடியும் பட்சத்தில் அதன் இணைப்புக் கண்ணியை இறுதியில் பதிவிடுகிறேன். லோகேஷ் ரகுராமனின் கதைகளில் ஒவ்வொரு சிறுகதையும் வேறு வேறு களங்களில் நடக்கின்றன. இச் சிறுகதை சென்னையில் நடக்கிறது. காது கேட்காத, மனைவியை இழந்த தந்தையைத் தன் வீட்டில் வைத்துப் பராமரிக்கும் மகள். ஆஸ்திரேலியாவில்  பயோ அக்கஸ்டிக்ஸில் (BIO ACOUSTICS) தாவரங்களின் ஒலி உணர்தல் குறித்து ஆராய்ச்சி செய்யும் மகன். காது கேட்காததால் நிகழ்ந்த  இரு சக்கர வாகன விபத்தில் மனைவியைப் பற்றி கொடுத்த தந்தை, மனைவியைத் தான் கொன்று விட்டதாகக் கருதி மனமுடைந்து போகிறார்.  தன் காதுக்குள் இறந்து போகும் முன் மனைவி எழுப்பிய அலறல் ஒலி கேட்பதாகச் சொல்லி வருந்துகிறார். மனைவி உயிரோடு இருக்கும் காலத்தில் அவள் ஆசையாகப் பராமரித்த தோட்டத்தைக் குறித்து எந்த அக்கறையுமின்றி இருந்...

பொது இடங்களில் இம்சைகள்

Image
 பொது இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை ஒரு பாடமாக பள்ளிகளில் வைத்து விடலாம்.‌ காரணம் நம்மாட்கள் செய்யும் அட்ராசிட்டி. என் கண்ணில் பட்ட சில நிகழ்வுகளில் நம் மக்கள் எவ்வளவு சுயநலமாக அடுத்தவரைக் குறித்துக் கவலையே படாமல் இருக்கிறார்கள் என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். ஒரு‌வகையில்‌ வட இந்தியர்களை‌ விட நாம்‌ பரவாயில்லை.‌ வட இந்தியாவில் சுயநலமிக்க மக்கள் அதிகம் என்பது‌ என் கருத்து. பிக் பாக்ஸர்கள் (BIG BOXERS) அதாவது பெரிய பெட்டிக்காரர்கள். முதலாவதாக ரயில் பயணங்களில் லக்கேஜ் எடுத்துவரும் பயணிகள் குறைந்தபட்சமாக இரண்டு சூட்கேஸ்களாவது எடுத்து வருகிறார்கள். டறள திரும்பும் பயணிகள் பெரிய ஜம்போ சைஸ் சூட்கேஸ்கள்  நாலைந்து எடுத்து வருவார்கள்.‌ அந்த சூட்கேஸ்களில் சராசரியாக அறுபது கிலோ நிறையுள்ள ஒருவரை நாலாக மடித்து உள்ளே வைத்து விடலாம்.‌ அத்தனை பெரிசாக இருக்கும்.‌ இவர்கள் எல்லாம் ரயில் வந்து நின்றதும் முண்டியடித்துக் கொண்டு லக்கேஜுடன் ஏறி லக்கேஜ் வைக்கும் இடத்தை நிரப்பி விடுவார்கள்.‌ ( அடுத்தவரை ஏறவே விட மாட்டார்கள்). சரி இவர்களுக்கு வழி விட்டு பின்னர் ஏறும் என் போன்ற புஜபல ...

அது நீ - விஷ்ணு வந்தார் நூலின் இரண்டாம் கதை

Image
 இந்தியாவின் டெல்லியில் வசிக்கும் நண்பனை அதாவது கதை சொல்லி ஃபிராங்கோவை பாலஸ்தீனத்தின்‌ ஜெரிக்கோ (Jericho) நகரில் வசிக்கும் அரேபிய நண்பன் ஜியாங் முகமது அப்பாஸ் அழைக்கிறார்.‌ கதை சொல்லுபவர் ஒரு மரபணு விஞ்ஞானியாக இருக்க வேண்டும்.‌  அரேபிய நண்பன் அவரது கல்லூரித் தோழன்.‌  பாலஸ்தீனத்தில் வசிக்கும் பழங்குடி இன இடையர்களில் ஐம்பது சதவீதம் பேருக்குக் காணப்படும் ஒரு விசித்திரமான தழும்பு குறித்து மரபணு ரீதியில் ஆராய வேண்டித் தன் இந்திய‌ நண்பனை அழைத்திருப்பதாகக் கதை‌ தொடங்குகிறது. இந்திய நண்பன் இஸ்ரேலின் டெல்அவிவ்வில் இறங்கி பாலஸ்தீனத்தில் உள்ள ஜெரிக்கோ நகரை காரில் பயணித்து அடைகிறார். வழியில் அந்தப் பிராந்தியத்தின் அமைப்பை விவரிக்கிறார்.‌ ஒரு பக்கத்தில் பல செய்திகளை சொல்லி விடுகிறார். இஸ்ரேல், பாலஸ்தீனம், ஜோர்டான் ஆறு, பெரும் பிளவு பள்ளத்தாக்கு ( Great Rift Valley), கலிலி கடல் ( Gallile sea), சாக்கடல் (Dead sea), ஏசு கிறிஸ்து தொடர்புடைய நிகழ்வுகளை பட்டியல் இட்டு நம்மை ஆச்சரியத்தில்  ஆழ்த்தி விடுகிறார்.  ஆனால் அந்தப் பகுதியின் ஒரு வரைபடம்  தரப்பட்டிருந்தால் என்னைப் போன்ற...

இரத்தச் சர்க்கரைச் சோதனைகளின் (Blood Sugar Tests) முக்கியத்துவம்

Image
இரத்தச் சர்க்கரைச் சோதனைகள் (Blood Sugar Tests) என்பவை   நம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை மதிப்பிடும் ஒரு வழிமுறையாகும். இச் சோதனைகளை உங்களுக்கு மருத்துவர் நீரிழிவு நோயைக் (Diabetes) கண்டறியப் பரிந்துரைக்கலாம். மேலும் இச் சோதனைகள் நீரிழிவு நோய் உள்ள நோயாளிகளும் தங்களது நோயின் நிலையை கட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவுகின்றன. இரத்தச் சர்க்கரைச் சோதனை தரக் கூடிய உடனடியான   முடிவுகள் வாயிலாகக் கிடைக்கும் நற்பயன்கள் 1) நமது வழக்கமான உடற்பயிற்சி அல்லது உணவில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் 2) நீரிழிவு நோய்க்காக எடுத்துக் கொள்ளும் மருந்தின் செயல்பாடு 3) இரத்தச் சர்க்கரையின் அளவு குறைவாக உள்ளதா அல்லது அதிகமா உள்ளதா என்றறிதல் 4) நீரிழிவு நோய்க்கான ஒட்டு மொத்த சிகிச்சையின் இலக்கை நிர்வகித்தல் ஆகியன. மருத்துவர் இரத்தச் சர்க்கரைச் சோதனையை வழக்கமான சோதனையாகக் கூடப் பரிந்துரைக்கலாம். இதனால் அவர் நோயாளி நீரிழிவு நோய்க்கு முந்தைய கட்டத்தில் (Prediabetes) உள்ளாரா அல்லது நீரிழிவு நோயை (Diabetes) அடைந்து விட்டாரா என அறிந்து கொள்ள இயலுகிறது. இரத்தச் சர்க்கரைச் சோதனை என்...

தொலைக்காட்சியா இல்லை தொல்லைக்காட்சியா

Image
 காலையில் பெரும்பாலான  தினங்களில் நடைப்பயிற்சி முடித்து வீட்டுக்கு வந்து வியர்வை ஆற்ற தொலைக்காட்சி முன் உட்கார வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அப்போது மெகா டிவியில் அமுதகானம் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும்.‌ வேறு வழியின்றி அதைக் காண்பது வழக்கம். இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குபவர் திரு.‌ ஆதவன் என்பவர்.‌ இவர் கிட்டத்தட்ட 6000 எபிசோட் களை வழங்கியுள்ளதாகவும் தெரிகிறது.‌ ஆனால் அவரது நிகழ்ச்சித் தொகுப்பு எந்த மாற்றமும் இல்லாமல் ஒரே மாதிரியாகவே நிகழ்ச்சி  தொடங்கிய அன்றிலிருந்து இன்றுவரை நடந்து கொண்டு இருக்கிறது.‌  தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவ்வப்போது காலத்துக்கு ஏற்ப மாற்றம் செய்யப்பட வேண்டும். சும்மா கை விரல்களால் வித்தை காட்டியும், ஏற்கெனவே போட்டுப் போட்டு கேட்டலுத்துப் போன திரைப்படப் பாடல்களையே வழங்கி வருகிறார்.‌ பார்க்கிற நமக்கு வெறுத்துப் போய் விடுகிறது.‌ மொத்தமே ஒரு இருபது முப்பது பாடல்கள்தான்.‌ அவற்றையே நிகழ்ச்சியில் வரிசை மாறிப் போடுவது சலிப்பூட்டுகிறது.‌  ஆதவன் அவர்கள் தன்னுடைய நிகழ்ச்சி நடத்தும் விதத்தை விரைவில் மாற்றிக் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்...

விஷ்ணு வந்தார் - கதை (1) - லோகேஷ் ரகுராமன்

Image
 லோகேஷ் ரகுராமனுக்கு கதை சொல்வதில் எந்தத் தடுமாற்றமும் இல்லை. தஞ்சாவூர் வாத்திமா பிராமணர்கள் அவர்களின்‌ ஆதி வரலாறு, அவர்களின் பதினெட்டு ஊர்கள், சடங்குகள் என்று பிரித்து மேய்ந்து இருக்கிறார். சில தகவல்கள் இதுவரை கேள்விப்படாதவை.‌ வாத்திமர் என்பது மத்யமரிலிருந்து மருவிய சொல் என்பது. நாகார்ஜுனரால் ஏற்படுத்தப்பட்ட பெளத்த மதத்து மாத்யாமீகம் பிரிவு அத்வைத தத்துவத்தை ஒத்திருந்ததால் அவர்களை கெளடபாதர் அத்வைதத்தில் இணைத்தார்.‌ பின்னாளில் ஆதி சங்கரரும் அதை ஏற்றுக் கொண்டார் என்ற தகவல் அப்படிப்பட்டதே. மற்றொரு சுவாரசியமான கதை அரசலாற்றின் பெயர் காரணக் கதை.‌ விஷ்ணு சக்கராயுத்தைத் தொலைத்து விட்டு வீழிமலை சுவாமியைத் தவமிருந்து பெற்றது.‌ விஷ்ணு வந்த ஊர் என்பதால் விஷ்ணுபுரம் என்ற பெயர் வந்த காரணம், அரிசொல் ஆறு என்பதே அரசலாற்றாக மருவியது எல்லாம் அந்த ரகம். கதை மாந்தர்கள் மொத்தமாக ஏழு பேர்தான்.‌ விஸ்வநாதையர், சாம்பமூர்த்தி, வீழி சார் என்ற ரிட்டரயர்ட் பள்ளிக்கூட வாத்தியார் வீழிநாதன், இறந்து போய் விட்ட தக்காளி சுவாமிநாதன், அவருக்கு ஸ்ரார்த்தம் செய்ய ஊருக்கு வருடந்தோறும் வரும் அவருடைய தத்துப் புத்திரன் ஆடிட...