நிழல் - கதை(3) - லோகேஷ் ரகுராமன்
'விஷ்ணு வந்தார்' புத்தகத்தில் இரண்டாவது கதையான 'அது நீ' கதையை நீங்கள் படித்திருப்பீர்கள். அந்தக் கதையை லோகேஷ் ரகுராமன் மறைபொருள் எதார்த்தவாத (MYSTICAL REALISM) பாணியில் வடிவமைத்திருப்பார். இந்த நிழல்கள் கதையில் மாய எதார்த்தப் (MAGICAL REALISM) பாணியைப் பயன்படுத்தியிருக்கிறார். அதென்ன மறை பொருள் எதார்த்தவாதம் , மாய எதார்த்தம்? என்ன வேறுபாடுகள் இவற்றுக்கிடையில் என்ற எண்ணம் நமக்குத் தோன்றுவது தவிர்க்க இயலாது. மாயாஜால அல்லது மாய யதார்த்தவாதம் (Magical Realism) என்பது சாதாரண நிஜ வாழ்க்கையில் மாயாஜால நிகழ்வுகள் சாதாரணமாக நடப்பது போல் எழுதுவது. மறைபொருள் யதார்த்தவாதம் (Mystical Realism) என்பது ஆன்மீகம், பிரபஞ்ச சக்தி அல்லது மத நம்பிக்கைகளை மையமாகக் கொண்டு, உலகத்தை ஒரு மாயக் கண்ணோட்டத்தில் பார்ப்பது. லோகேஷ் ரகுராமன் ஏசுவின் உயிர்த்தெழுதல் என்னும் (Resurrection ) மத நம்பிக்கையை மையமாகக் கொண்டு கதை 'அது நீ' கதையைப் புனைந்திருப்பார். இந்த நிழல் புனைவில் அது போன்ற மத நம்பிக்கையைச் சார்ந்த விஷயங்கள் எதையும் சேர்த்து எழுதவில்லை. ஆகவே இக்கதையை மேஜிக்கல் ரியலிசம் என்றே நா...