Posts

நிஷ்கலங் மகாதேவ் ஆலயம்

மகாபாரதத்தில் குருஷேத்திரப் போரில் கௌரவர்கள் கொல்லப்பட்டு பாண்டவர்கள் வெற்றி அடைகின்றனர். போரில் வென்ற போதும் சொந்தபந்தங்களைக் கொன்ற பெரும் பாபம் அவர்களைச் சேர்ந்ததால் பாண்டவர்களின் மனதில் நிம்மதி இல்லாமல் போனது. இந்தப் பெரும் பாபம் நீங்கி விமோசனம் பெற வேண்டி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை அணுகி வழிகாட்ட வேண்டினர். பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் அவர்களிடம் ஒரு கருப்புப் பசுவையும் கருப்புக் கொடியையும் அளித்தார். கருப்புக் கொடியைப் பிடித்தபடி கருப்புப் பசுவைப் பின் தொடர் வேண்டும் என்றும், எந்த ஒரு இடத்தில் கருப்புக் கொடியும், கருப்புப் பசுவும் வெண்ணிறமாக நிறம் மாறுகிறதோ அந்த இடத்தில் பாபவிமோசனம் பெறச் சிவபெருமானை நோக்கித் தவமியற்றி வேண்டும் என்றும் அறிவுரை கூறினார். பாண்டவர்கள் ஐவரும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் அறிவுரைப்படி கருப்புப் பசுவின் பின்னே கருப்புக் கொடியைப் பிடித்தவாறு பல ஆண்டுகளாகப் பாரத தேசத்தின் பல இடங்களிலும் நடந்து வந்தனர். தற்போதைய குஜராத் மாநிலத்தில் பவ்நகர் (Bhavnagar) மாவட்டத்தில் உள்ள கோலியாக் (Koliyak)நகரத்தின் கடற்கரைக்கு வந்தபோது கருப்புக் கொடியும், கருப்புப் பசுவும் வெள்ளையாக நிறம் மா

அதிக உடல் பருமன் ( Obesity)

Image
அதிக உடல் பருமன் (Obesity) என்பது பொதுவாகவே பிறரின் கேலிப் பேச்சுகளால்  மன உளைச்சலையும் அதே நேரம் உடல் ரீதியான பல பிரச்சனைகளையும் தரக் கூடியது. உடலின் எடை அதிகரித்தல் மட்டுமே அதிக உடல் பருமன் (Obesity) இல்லை. இது உடலில் கொழுப்பு சேகரமாவதால் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, கொலஸ்டிரால் மட்டுமல்லாமல்  புற்றுநோய்  தாக்கும் அபாயத்தைக் கூட அதிகரிக்கச் செய்யும் தீவிரமானதொரு மருத்துவ நிலை என்றும் சொல்லலாம்.   ருசித்து வயிறாரச் சாப்பிடக் கூட நேரமில்லாமல் மிகவும்  கஷ்டப்பட்டு உழைத்துப் பணம் சம்பாதித்து, அப்படிச் சம்பாதித்ததுச்  சேமித்த பணத்தை  வாயைக்கட்டி வயிற்றைக் கட்டி சேர்த்த பணம் என்று சொல்வது வழக்கம். உண்மையில் வாயைத் கட்டி வாழ்ந்தால் நிச்சயமாகப் பிற்காலத்தில் வயிற்றைக் கட்டி வாழ வேண்டி இராது என்று கொழு உடல் மருத்துவ இயல் அல்லது உடல் பருமனியல் மருத்துவம்  (Bariatric medicine) தெரிவிக்கிறது. உண்மையில் வாயைக் கட்டாமல் அதாவது கண்டவற்றையும் தேவையில்லாமல்  உட்கொண்டால் பின்னாளில் வயிற்றை இறுக்கிப் பிடித்துக் கட்ட வேண்டி வரும். இரைப்பைப் பட்டை அறுவைச் சிகிச்சை (Gastric Band surgery) குறித்துச் சொ

அண்ணா நகர் அனுபவங்கள்

Image
அண்ணாநகர் இரண்டாவது நிழற் சாலை சென்னையின் மிக அழகான சாலைகளில் ஒன்று . சுமார் இருபத்தைந்து ஆண்டுகள் முன்பு இச்சாலையில் தபால் அலுவலகத்திற்கு எதிரில் இருந்த ஒரு வீட்டு வசதி வாரிய அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்தேன்.  குடியிருப்பில் மொத்தம் ஐந்து அடுக்குகள். ஒவ்வொரு அடுக்கிலும் மூன்று தளங்கள். ஒவ்வொரு தளத்திலும் எதிரெதிராக இரண்டு வீடுகள். நான் 1988 முதல் 1994 வரையில் முதல் தளத்தில் கதவு எண் 342/4 வசித்தது வந்தேன்.  இரு படுக்கை அறை அடுக்ககம். இரண்டு பத்துக்குப் பத்து படுக்கை அறைகள் அதே அளவில் ஒரு வரவேற்பறை, சிறிய ஆனால் வசதியான சமையலறை என்று காற்றும் வெளிச்சமும் எல்லா அறைகளிலும் போதிய அளவில் கிடைக்கக் கூடிய வகையில்  நேர்த்தியான கட்டமைப்பை உடையது. கட்டுமானம் மிகத் தரமானது என்று சொல்ல இயலாத போதும் அடுக்ககத்தின் வளாகத்தில் முன்புறம் பாதுகாப்பாகக் குழந்தைகள்  விளையாட நிறையத் திறந்த வெளி, சாலையை ஒட்டி இருப்பதும் கடைகள் வங்கிகள் என பல வசதிகள் இருநூறு மீட்டர் தொலைவில் சரவண பவன்  நடைப்பயிற்சிக்கு விஸ்வேஸ்வரய்யா பூங்காவும் பக்திக்கு ஐயப்பன் கோவிலும் இருந்ததால் அந்த இடம் ஒரு மிகச்சிறந்த வசிப்
நான் பணிபுரிந்த பள்ளியில் 2006 வாக்கில் நபார்ட் வங்கிக் கடன் மூலம் முப்பத்திரண்டு வகுப்பறைகளுடன் இரண்டு ஆய்வகங்கள் என்று கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் செலவில் கட்டடங்கள் கட்டப்பட்டன. எல்லா வகுப்புகளுக்கும் போதுமான அளவுக்கு மின்விசிறிகளும் (fans) குழல் விளக்குகளும் (tube lights) போடப்பட்டு இருக்கும்.  இந்த மின்விசிறிகளின் இறக்கைகளை  தாமரைப் பூவைப் போல வளைப்பதும் குழல் விளக்குகளை உடைப்பதும் அவ்வப்போது நடக்கும். உடைக்கும் மாணவர்கள் யார்யாரெனக் கண்டுபிடித்தால் அரசியல் தலையீடுகள் வரும். அதனாலேயே ஆசிரியர்களும் தலைமை ஆசிரியரும் நமக்கேன் வம்பு என்ற எண்ணத்தில் கண்டும் காணாமல் இருந்து விடுவார்கள். சும்மா பேருக்கு இது போலப் பள்ளியில் சேதப்படுத்தும் செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காலையில் பிரார்த்தனைக் கூட்டத்தில் எச்சரிக்கை செய்வதும் எழுத்துப் பூர்வமாக எல்லா வகுப்புகளுக்கும் சுற்றறிக்கை விடுவதும் மட்டுமே இது சார்ந்து எடுக்கப்படும் கடும் நடவடிக்கையாக இருக்கும்.  2000 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஏதாவது வகையில் பள்ளியில் மாணவர்கள் இடையில் அமைதியின்மையும் ஒழுக்கமின்மைய
அருள்மிகு சீனிவாசப்பெருமாள் திருக்கோயில், நாச்சியார்கோயில்,  கும்பகோணம் வட்டம், தகவல் பலகை : ஸ்ரீவாசுதேவன், பரிபூரணன், நம்பி, சீனிவாசன் வஞ்சுளவல்லி, நாச்சியார் ஸ்ரீப்ரத்யும்ணன், ஸ்ரீலங்கர்ஷ்ணன், ஸ்ரீ புருஷோத்தமன், ஸ்ரீ பிரும்மா, ஸ்ரீ அநிருத்தன் : ஸ்ரீசீனிவாசப்பெருமாள், ஸ்ரீ வஞ்சுளவல்லி தாயார் ஸ்ரீ பட்சிராஜன் (கவலைகள் நீக்கும் கல்கருட பகவான்) ஸ்ரீ ராமர் ஸ்ரீ சக்கரத்தாழ்வார். ஸ்ரீ யோக நரசிம்மன். ஸ்ரீ ஹனும். ஸ்ரீ வெங்கடாஜலபதி, ஸ்ரீ திருமங்கை ஆழ்வார். நம்மாழ்வார் மூலவர்கள் பெயர் தாயார் இதர மூலவர்கள் உற்சவர் பெயர்கள் வரப்பிரசாதி முக்கிய தீர்த்தம் * மணிமுக்தா தீர்த்தம் (திருக்குளம்) ஸ்தல விருட்சம் ஆகமம் மகிழ மரம் : வைகானச ஆகமம் - தென்கலை சம்பிரதாயம் திருக்கோயில் சிறப்பு  திருமங்கை ஆழ்வாரால் 100 பாசுரங்கள் மங்கம் செய்யப்பட்ட திவ்யதேசங்களின் வரிசையில் 20ஆவது திவ்ய தேசமாகும். சோழநாட்டு மங்களாசாசனம் செய்யப்ப திருக்கோயில் வரிசையில் 14 ஆவது திவ்ய தேசமாகும்.  திருப்பதிக்கு இணையான பிரார்த்த ஸ்தலம் “தேன் கொண்ட சாரில் திருவேங்கடத்தானை நான் சென்று நாடி திருநறையூர் (நாச்சியார்கோயில்) கண்டேனே என்று திரும

கண்ணோட்டம்

Image
  கடந்த 2016 ஆம் ஆண்டில் எனக்குப் பார்வை சற்றே மங்கலாக இருப்பதாகத் தோன்றியது.  சென்னையில் எழும்பூரில் உள்ள அரசு கண் மருத்துவமனை மிகவும் பழமையான பாரம்பரியம் மிக்க மருத்துவமனை. அடுத்து மிகப் புகழ் பெற்ற பெற்ற நுங்கம்பாக்கத்தில் உள்ள சங்கரநேத்ராலயா கண் மருத்துவமனை. இவை தவிர அகர்வால், வாசன் கண் மருத்துவமனைகளும் பல சிறிய தனியார் மருத்துவமனைகளும் உள்ளன.  உடனே அருகிலுள்ள பிரபலமான சென்னையில் பல கிளைகளைக் கொண்ட  தனியார் கண் மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொள்ளச் சென்றேன். அங்கு பரிசோதனைகள் செய்து உங்களுக்குக் கண்புரை அறுவைச் சிகிச்சை (Cataract operation) உடனே செய்ய வேண்டும். மருத்துவக் காப்பீடு ( Medical insurance) உள்ளதா? என்று கேட்டார்கள்.  அவர்கள் நிறுவனம் வழங்கும் மூன்று நான்கு வகையான புரை நீக்க அறுவைச் சிகிச்சைக்குரிய கட்டணத்தையும் கூறிய பின் எப்போது சிகிச்சையை வைத்துக் கொள்ளலாம்? என்றும் விரைவில் செய்து கொள்ளுங்கள், நீங்கள் சர்க்கரை நோயாளி என்பதால் பார்வையை இழக்கும் அபாயமும் உள்ளதென பயமுறுத்தினர்.  நான் எதற்கும் வேறொரு மருத்துவமனையில் இரண்டாவதாக கருத்துக் கேட்டு பின் முடிவெடுக்கலாம் என்ற

*UNIVERSAL PASS CUM CERTIFICATE*

நமது இந்திய அரசு கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸும் போட்டவர்களுக்கு ஒரு பாஸ் கம் சர்டிபிகேட் ஐ ஆன்-லைன் மூலமாகவே பெற ஏற்பாடு செய்திருக்கிறது. இந்த பாஸ் & சர்டிபிகேட் ஐ பெறுவதால் நீங்கள் அரசு போக்குவரத்து, பொது இடங்கள், பேருந்து - ரயில் - விமான நிலையம் மற்றும் மால் போன்ற அனைத்து இடங்களிலும் உங்களது புகைப்படத்துடன் கூடிய இந்த பாஸை வைத்து எந்த தடங்கலின்றியும் நுழையலாம் - பயணிக்கலாம். கீழே நான் தந்துள்ள லிங்க் ஐ க்ளிக் செய்து உங்களது பதிவு செய்த மொபைல் எண் ஐ தந்து OTP பெற்று Enter செய்தால் உங்களது பாஸ் & சர்டிபிகேட் அடுத்த 30 நிமிடங்களுக்குள் டவுன்லோடு ஆகும். Link ஐ க்ளிக் செய்வதற்கு முன்னர் உங்களது போனில் உங்களது பாஸ்போர்ட் சைஸ் போட்டோவை தயார்நிலையில் வைத்துக் கொள்ளுங்கள். பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இல்லாதிருந்தால் ஷோக்கா ஒரு செல்ஃபி எடுத்தும் அனுப்பலாம். உங்களது சர்டிபிகேட் ஐ  வெளிநாடு செல்வதற்குக் கூட PASS ஆக பயன்படுத்தலாம். பொதுமக்களுக்கான தகவலை தமிழாக்கம் செய்து வெளியிடுபவர் : _கோவை ரவீந்திரன்_. கிளிக் செய்ய வேண்டிய லிங்க்👇 https://epassmsdma.mahait.org