கடல் கனித்தது - கதை(11) - லோகேஷ் ரகுராமன்
வில்லுண்டித் தீர்த்தம் இரண்டு தலைமுறைகளுக்கு முந்தைய கதை என்று சொல்லலாம். தன் தந்தையைப் பராமரிக்கும் மகள். அவளது தாயை எவ்வளவு அலட்சியமாகத் தன் தந்தை நடத்தினார் என்பதைச் சுட்டிக் காட்டுகிறார். அம்மாவின் மாதவிலக்கு நாட்களில் குடிக்கக் தண்ணீர் கேட்டால் கண்டும் காணாதது போல இருந்து விடுவார். சரி அவர்தான் எடுத்துத் தரவில்லை. வேறு யாரையாவது அழைத்துக் கூடத் தரச் சொல்ல மாட்டார். மறந்த போனது போல இருந்து விடும் ஆண்களின் ஆணவம். அம்மாவின் அப்பாவும் அம்மாவும் இவரிடம் தங்கள் மகள் படும் பாட்டை மனதுக்குள் வைத்துக் கொண்டு மறுகுவார்கள். தன் பிள்ளைகளுக்கு நல்ல தகப்பன். ஆனால் மனைவிக்கு நல்ல கணவனாக இல்லை என்பதைச் சொல்ல வரும் மகள் தன் கணவன் அவளைக் கொடுமைப் படுத்தினால் எவ்வளவு எவ்வளவு மனவேதனை அடைவார் என்கிறார். நல்ல வேளை அப்பா மாதிரி ஒரு கணவன் தனக்கு வாய்க்கவில்லை என்கிறாள். சாம்பாரில், ரசத்தில் உப்பு அதிகம் போட்டிருக்கிறாய். வாயில் வைக்க முடியவில்லை கரிக்கிறது என்று பிரச்சினை செய்கிறார் அந்த முதியவர். நாளா...