செப்டம் - கதை (6) லோகேஷ் ரகுராமன்
அரோமா சிறுகதைத் தொகுப்பு நூலில் இது ஆறாவது கதை. கதைக்கான இணைப்புக் கண்ணி கீழே உள்ளது. https://tamizhini.in/2021/12/24/%e0%ae%9a%e0%af%86%e0%ae%aa%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d/ சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் பூம்புகார் சென்றிருக்கிறேன். அப்போதே சரியான கவனிப்பின்றி இருந்ததைக் காண முடிந்தது.கதையில் பூம்புகாரின் இப்போதைய நிலையை லோகேஷ் ரகுராமன் கண்முன் நிறுத்துகிறார். நல்ல சுற்றுலாத் தலமாக விளங்கியிருக்க வேண்டியது இப்போது சீர்குலைந்து போட்டிருப்பதை உணர முடிகிறது. நல்லதோர் வீணை நலம் கெடப் புழுதியில். சிலப்பதிகாரத்தில் வரும் ஐம் பெரும் மன்றங்களில் ஒன்று நெடுங்கல் மன்றம். சிறு வயது முதலே எலிப் பொந்து போன்ற வீட்டில் வசித்த அவனுக்கு விஸ்தாரமான இடத்தில் வசிக்க வேண்டும் என்ற ஆசை. நெடுங்கல் மன்றத் தூண்களுக்கு இடையில் நிறையவே இடம் விட்டு விசாலமாகக் கட்டியிருக்கலாம் என்ற இடத்தில் கதாநாயகனின் இந்த ஆதங்கம் வெளிப்படுகிறது நெடுங்கல் மன்றத்தை பட்டப் பகலில் பொது இடம் என்றும் பாராமல் வெட்கமின்றிக் காம இச்சையை தீர்த்துக் கொள்ளும் இளம் ஜோடிகளை தெரு நாய்களுக்கு ஒப்பிடுவதும...