Posts

கறை - கதை (9) - லோகேஷ் ரகுராமன்

Image
இந்தக் கதை 2022 ஆம் ஆண்டில் கர்நாடகாவில் ஒரு கல்லூரியில் நடைபெற்ற  நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது என்றே நினைக்கிறேன். கதையின் இணைப்புச்‌ சுட்டி கிடைக்கவில்லை. லோகேஷ் ரகுராமன் சாரிடமிருந்து பெற்று  விரைவில் இணைக்கிறேன்.  கறை என்பது  மத வெறியர்களால் மதத்தின் பெயரால் ஏற்பட்ட கறையா? அல்லது அந்த அப்பாவி இஸ்லாமிய மாணவியின் புர்காவில் ஏற்பட்ட கறையா? என் வரையில் நம் அனைவரது மீதும் படிய வைக்கப்பட்ட கறை என்றே தோன்றுகிறது. கல்லூரியில் படிக்கும் சற்று வெகுளித்தனமான பெண். அவளது மென்மையான இயல்பு எல்லாம் அழகாக சொல்லப்பட்டுள்ளது. பொதுவாகவே பள்ளியலும் கல்லூரியிலும் படிக்கும் காலத்தில் எல்லாப் பெண்களுமே செல்லமாகவும், சோம்பேறித்தனமாகவுமே இருப்பார்கள். என் மகள் கூட அப்படித்தான். வீட்டு வாசலில் ஆட்டோ வந்த பின்புதான் காலை உணவை வாயில் திணித்துக் கொண்டு ஷூவைக் கையில் தூக்கிக் கொண்டு ஓடுவாள். இங்கும் அதே கதைதான். குளிக்கப் போனாலும் அதிக நேரம் எடுத்துக் கொள்வது. எல்லாம் நம் வீட்டின் செல்லப் பெண்களை அப்படியே அச்சு அசலாகக் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது. புர்கா தினமும்‌ அ...

பொன்மார் - கதை (7) லோகேஷ் ரகுராமன்

Image
  முதலில் கதையின் இணைப்புக் கண்ணி.  https://lokeshraghuraman.wordpress.com/2017/09/08/ponmaar-short-story/ கதை உங்களுக்கு அதிர்ச்சி தரலாம். ஆனாலும் ஆணின் சுயநலத்தைக் காட்டும் கதையாகவே இதை நான் எடுத்துக் கொண்டேன்.  எல்லாரோட எழுத்திலும் எல்லாம் இருக்கும். இர்விங் வாலஸின் "SEVEN MINUTES"  ஹெரால்டு ராபின்ஸின் "A STONE FOR DANNY FISHER" இவற்றைச் சுட்டலாம். அது போலத்தான் லோகேஷ் ரகுராமனின் பொன்மாரையும் பார்க்கிறேன். இனி என் பார்வையில் பொன்மார் கதையைக் காண்போம்.  கல்கத்தா நகரின் சிவப்பு விளக்குப் பகுதி சோனாகாச்சியின் பின்புலத்தில் கதை சொல்லப் படுகிறது.  கதாநாயகன் இளைஞன். காமத்தை அனுபவிக்கத் துடிக்கும் வயது. வாழ்கையின் பல நேரங்களில் தோல்வியைச் சந்தித்த அவனுக்கு காமத்தை ருசிப்பதே வடிகால் எனத் தோன்றுகிறது.  பேருந்தில் சோனாகாச்சியின் 11000 பாலியல் தொழிலாளர்களின் வாழ்வாதாரப் பிரச்சினையான நாப்கின்னுக்கு விதிக்கப்பட்ட GST பற்றிச் சக பயணி அவனிடம் கூறுகிறார். பேருந்தில் கூட்டமாக ஏறும் பாலியல் தொழிலாளர்கள் GST க்கு எதிரான தங்கள் எதிர்ப்பைக் காட்ட ஆண்களுக்கு ராக்கி கட்டி...

செப்டம் - கதை (6) லோகேஷ் ரகுராமன்

Image
 அரோமா சிறுகதைத் தொகுப்பு நூலில் இது ஆறாவது கதை.  கதைக்கான இணைப்புக் கண்ணி கீழே உள்ளது. https://tamizhini.in/2021/12/24/%e0%ae%9a%e0%af%86%e0%ae%aa%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d/ சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர்  பூம்புகார் சென்றிருக்கிறேன். அப்போதே சரியான கவனிப்பின்றி இருந்ததைக் காண முடிந்தது.கதையில் பூம்புகாரின் இப்போதைய நிலையை லோகேஷ் ரகுராமன் கண்முன் நிறுத்துகிறார். நல்ல சுற்றுலாத் தலமாக விளங்கியிருக்க வேண்டியது இப்போது சீர்குலைந்து போட்டிருப்பதை உணர முடிகிறது.‌ நல்லதோர் வீணை நலம் கெடப் புழுதியில். சிலப்பதிகாரத்தில் வரும் ஐம் பெரும் மன்றங்களில் ஒன்று நெடுங்கல் மன்றம்.‌  சிறு வயது முதலே எலிப் பொந்து போன்ற வீட்டில் வசித்த அவனுக்கு விஸ்தாரமான இடத்தில் வசிக்க வேண்டும் என்ற‌ ஆசை.‌ நெடுங்கல் மன்றத் தூண்களுக்கு இடையில் நிறையவே இடம் விட்டு விசாலமாகக் கட்டியிருக்கலாம் என்ற இடத்தில் கதாநாயகனின் இந்த ஆதங்கம் வெளிப்படுகிறது நெடுங்கல் மன்றத்தை பட்டப் பகலில் பொது இடம் என்றும் பாராமல் வெட்கமின்றிக் காம இச்சையை தீர்த்துக் கொள்ளும் இளம் ஜோடிகளை தெரு நாய்களுக்கு ஒப்பிடுவதும...

ஒளி நிறைந்தவர்கள் கதை(5) - லோகேஷ் ரகுராமன்

Image
  பணி நிறைவு செய்த இயற்பியல் ஆசிரியரான என்னை அதிகம் ஈர்த்த கதைகளில் இதுவும் ஒன்று. வழக்கம் போல அறிவியலைக் கலந்து பரிமாறி இருக்கிறார் லோகேஷ் ரகுராமன். இதோ கதை கீழே. https://www.aroo.space/2021/11/27/%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/ நம் கதாநாயகன் பெங்களூரில் ஒரு IT நிறுவனத்தில் பணிபுரிகிறார். மனிதர்களைப் பார்த்துப் பார்த்து சலித்துப்போன  அவன் உத்தர கர்னாடகாவில் உள்ள ஒரு மலைப் பகுதிக்கு வருகிறான். காலா நதி உற்பத்தி ஆகுமிடம் அது.‌ அந்த மலைக் காடுகளில் மலை ஏற அனுமதி கிடைப்பது கடினம். ஷைலேந்திரா கதாநாயகனுடன் பணியாற்றியவர்.  திடீரென ஒரு நாளில் வேலையை விட்டுவிட்டு மலை ஏறும் குழுக்களுக்கு வழிகாட்டியாக ஆகி விடுகிறான். அவன், "நான்கு‌ சுவர்களுக்கு அப்பாலேதான் வாழ்க்கை" என்பான்.‌ நான் ரசித்து அனுபவித்த வரி அது. அற்புதமான உண்மை. ஷைலேந்திரா நம் கதாநாயகனை 'மகா' என்றழைக்கிறார்.‌ அதனால் கதாநாயகன் பெயர் மகாதேவனாகவோ அல்லது மகாலிங்கம் ஆகவோ இருக்கலாம். பரவாயில்லை.‌ அது நமக்கு ...

நிழல் - கதை(3) - லோகேஷ் ரகுராமன்

Image
  'விஷ்ணு வந்தார்' புத்தகத்தில் இரண்டாவது கதையான 'அது நீ' கதையை  நீங்கள் படித்திருப்பீர்கள். அந்தக் கதையை லோகேஷ் ரகுராமன் மறைபொருள்‌ எதார்த்தவாத (MYSTICAL REALISM) பாணியில் வடிவமைத்திருப்பார். இந்த நிழல்கள் கதையில் மாய எதார்த்தப் (MAGICAL REALISM) பாணியைப் பயன்படுத்தியிருக்கிறார். அதென்ன மறை பொருள் எதார்த்தவாதம் , மாய எதார்த்தம்? என்ன வேறுபாடுகள் இவற்றுக்கிடையில் என்ற எண்ணம் நமக்குத் தோன்றுவது தவிர்க்க இயலாது. மாயாஜால அல்லது  மாய யதார்த்தவாதம் (Magical Realism) என்பது சாதாரண நிஜ வாழ்க்கையில் மாயாஜால நிகழ்வுகள் சாதாரணமாக நடப்பது போல் எழுதுவது.  மறைபொருள் யதார்த்தவாதம் (Mystical Realism) என்பது ஆன்மீகம், பிரபஞ்ச சக்தி அல்லது மத நம்பிக்கைகளை மையமாகக் கொண்டு, உலகத்தை ஒரு மாயக் கண்ணோட்டத்தில் பார்ப்பது. லோகேஷ் ரகுராமன் ஏசுவின் உயிர்த்தெழுதல் என்னும் (Resurrection ) மத நம்பிக்கையை மையமாகக் கொண்டு கதை 'அது நீ' கதையைப் புனைந்திருப்பார். இந்த நிழல் புனைவில் அது போன்ற மத நம்பிக்கையைச் சார்ந்த விஷயங்கள் எதையும் சேர்த்து எழுதவில்லை. ஆகவே இக்கதையை மேஜிக்கல் ரியலிசம் என்றே நா...

கூடடைதல் - கதை (2) லோகேஷ் ரகுராமன்

Image
  கூடடைதல் என்றால் இரை தேடி வானில் பறந்து திரியும் பறவைகள் மாலையில் தன் கூட்டை அடைதல் என்று பொருள்படும். வழக்கம் போலவே முதலில் கதையின் இணைப்புக் கண்ணியைக் கீழே தந்துள்ளேன்.‌ முழுமையாகப் படித்துவிட்டுப் பின்னர் கதையைப் பற்றிய என் பார்வையைப் படித்தல் சிறப்பாக இருக்கும். https://www.facebook.com/story.php?story_fbid=33849177108063644&id=100001943649284 உண்மையில் சிறுகதை என்ற‌  பெயருக்கு ஏற்ப மிகச் சிறிய கதையே. கதாநாயகன் பனிரெண்டு வயது முதல் இருந்து முப்பத்திரண்டு வயது வரை எந்தப் பொறுப்பும் இன்றி அரைப் பாக்கெட் சிகரெட் பிடித்தும், தூங்கியும், ஆற்றங்கரை மண்டபத்திலும் கழித்தவன். இப்போது எட்டாயிரம் ரூபாய் சம்பளத்தில் தொலைவாக இருக்கும் ஒரு ஊரில் வேலை செய்கிறான். அப்படி விட்டேத்தியாகப் பொறுப்பின்றி வாழ்ந்தவனையும் ஒருத்தி திருமணம் செய்து கொள்கிறாள். லோகேஷ் ரகுராமன் கதையில் வரும் பெண் பாத்திரங்கள் அதிகம் பேசாத உணர்ச்சிகளை வெளிக்காட்டாமல் எதையும்  அப்படியே ஏற்றுக்கொண்டு கடந்து செல்லும் தன்மை கொண்டவர்களாகச் சித்தரிக்கப்படுகிறார்கள். இந்தக் கதையிலும் அப்படியே.‌ கதாநாயகன் தன் வீட்டி...

ஆப்பிளும் விஷமும் - கதை (1) - லோகேஷ் ரகுராமன்

Image
லோகேஷ் ரகுராமன் ஆப்பிளும் விஷமும் கதையின் இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது.‌ திருமணம் செய்து கொள்ளாமல் இணைந்து வாழும் (LIVING TOGETHER COUPLE) இருவரின் அழகான காதல் கதை.‌ கதையை முழுவதும் படித்து விட்டு பின்னர் கதையை நான் அணுகிய விதத்தை என்னுடைய பார்வையில் எழுதியிருக்கிறேன்.  கதை குறித்த என்னுடைய பார்வையை எழுதும் போது அவர்களைக் கணவன் மனைவி என்று கருதியே எழுதினேன். ஆனால் கதாசிரியர் லோகேஷ் ரகுராமன் அவர்கள் திருமணம் செய்து கொள்ளாமல் இணைந்து வாழும் இருவர் என்று தெரிவித்தார்.‌ என்னுடைய காலங்களில் அத்தகைய வாழ்க்கை முறை இல்லை என்பதால் அந்தக் கோணத்தில் சிந்திக்கவே இல்லை.‌  https://lokeshraghuraman.wordpress.com/2019/11/29/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0 %AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/ ராணி அகல்யா பாய் ஹோல்கர் கோட்டை மாகாலேஷ்வர், மத்திய பிரதேசம். ஒருவர் மீது ஒருவர் நெஞ்சு நிறையக் ஆசையும் பாசமும் கொண்டு திருமணம் செய்து கொள்ளாமல் இணைந்து வாழும் இருவரின் காதல் காவியம் என்று சொன்னால் அது மிகையாகாது. கணவனைக் காதலிக...