எங்கட நினைவில் கடல் இல்லை - லோகேஷ் ரகுராமன்
நேற்று முகநூலில் எழுத்தாளர் திரு.லோகேஷ் ரகுராமன் அவர்களின் பக்கத்தை மேய்ந்து கொண்டிருந்தேன். அதில் "அந்தி மழை" மின்னிதழில் வெளியான கதையான "எங்கட நினைவில் கடல் இல்லை" கதைக்கான இணைப்பைக் கொடுத்திருந்தார். கதைக்கான இணைப்புக் கண்ணி இதோ கீழே தரப்படுகிறது. முதலில் கதையை முழுவதுமாகப் படித்த பின் என் பார்வையைப் படித்தல் நலம். https://www.andhimazhai.com/literature/short-stories/engada-ninaippil-kadal-illai கதையில் பெங்களூரில் மென் பொருள் பொறியாளராக பணிபுரியும் ஒருவர் 200 கிமீ தூரம் தனது புல்லட் மோட்டார் சைக்கிளில் பயணித்து பலமனேரு குடியாத்தம் அருகே உள்ள கிழக்குத் தொடர்ச்சி மலையில் உள்ள அருவியில் குளிக்கவும் ஓய்வெடுக்கவும் (அதாவது யாருடைய இடைஞ்சலுமின்றி மது அருந்த) வருகிறார். அப்போது அவரைப் போல மது அருந்த ஒரு லாரி ஓட்டுனர் ஒருவரும் அங்கே வருகிறார். இருவரும் நண்பர்களாக ஆகி ஒன்றாக மது அருந்துகின்றனர். முதலில் லாரி ஓட்டுனர் தன்னைத் திருப்பத்தூரைச் சேர்ந்தவர் என்று அறிமுகப்படுத்திக் கொள்கிறார். இரண்டு சுற்று மது உள்ளே சென்றதும் அவரது பேச்சு மொழி வேற...