தேனாண்டாள் - கதை (8) - லோகேஷ் ரகுராமன்
இந்தக் கதை குறித்த என் பார்வையை பகிர்வது குறித்து நெடு நேரம் சிந்தித்துக் கொண்டிருந்தேன். காரணம் கதையில் வரும் பொன்னன் என்ற பாத்திரம் தன் கூட்டாளி தங்கராசுவிடம் கோபத்தில் சொல்லும் போது பயன்படுத்தப்பட்ட சில வாசகங்கள். படிப்பறிவு இல்லாத மலை வாழ் மக்களின் வாழ்வியலைச் சித்தரிக்கும் கதையில் எதார்த்தமாக வரும் வசவுச் சொற்களை அருவருப்புடன் நோக்குவது நேர்மையான செயலாக இராது. மனதின் உள்ளே நீறுபூத்த நெருப்பாகக் கனன்று கொண்டிருக்கும் அடங்காத கோபத்தை வெளிக்காட்டும் சொற்கள் அவை. ஆகவே இச் சொற்கள் கதை ஓட்டத்தில் வலிந்து திணிக்கப்பட்டவை இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டேன். மேலும் ஒரு எழுத்தாளர் எழுதிய கதைக்கு தடை போடவும் குறை சொல்லவும் அதற்குச் சம்பந்தமில்லாத நான் யார்? நான் பகிர வேண்டாம் என்று முடிவெடுத்தாலும் வேறு இணைய மின்னிதழ்களில் அதனை படிக்கும் வாய்ப்பும் உரிமையும் வாசகர்களுக்கு நிச்சயமாக உண்டு. அதனால் பகிர முடிவு செய்தேன். என் முடிவை நீங்கள் ஆதரிப்பீர்கள் என்று நம்புகிறேன். இப்போது கதையின் இணைப்புக் கண்ணியைக் கீழே தந்துள்ளேன். வழக்கம் போல் கதையை முழுவதுமாகப...