நீர் பதுமராகம் - கதை (4) - லோகேஷ் ரகுராமன்
என்னுடைய பள்ளி வாழ்க்கை திருநெல்வேலி டயோசிசன் டிரஸ்ட் அசோசியேஷன் (TDTA) நடத்தி வரும் பள்ளி ஒன்றில் தொடங்கியது. திருநெல்வேலி டவுண் பகுதியில் இருந்த அந்தப் பள்ளியின் பின்புறம் ஒரு வாய்க்கால் ஓடும். வாய்க்காலில் மிதந்து வரும் ஆகாயத்தாமரை செடிகளை எடுத்து வந்து கரும்பலகை (BLACK BOARD) மற்றும் எங்களின் ஸ்லேட் (SLATE)முதலியவற்றைத் துடைப்போம். அப்படிச் சிறுவனாக இருக்கும் போதே எனக்கு அறிமுகமானதுதான் நீர் பதுமராகம் என்ற நமக்கு நன்கு பரிச்சயமான ஆகாயத் தாமரை ( Water Hyacinth). இவற்றின் மலர்கள் ் வெளிர் ஊதா, லாவெண்டர் மற்றும் இளம் சிவப்பு நிறங்களில் காணப்படுகின்றன. கிரேக்க தொன்மக் கதையில் இந்த நீர்த் தாவரம் உருவான செய்தி வருகிறது. படம் - நீர் பதுமராகம் தொன்மக் கதையைப் படிக்க ஆரம்பித்ததும் ஆகா, இது ஒரு மாதிரியான கே (GAY) களமாக இருக்கும் போலிருக்கிறதே என்று நினைத்தேன். ஆனால் நல்ல வேளையாக கதை அந்தத் திசையில் பயணிக்கவில்லை. ஹயாசிந்த் மலரின் கதை கிரேக்க தொன்மத்தில் ஆரம்பமாகிறது. அந்த கிரேக்க தொன்மக் கதையில் சூரியக் கடவுளான அப்பல்லோ (APOLLO) இ...