ஒளி நிறைந்தவர்கள் கதை(5) - லோகேஷ் ரகுராமன்
பணி நிறைவு செய்த இயற்பியல் ஆசிரியரான என்னை அதிகம் ஈர்த்த கதைகளில் இதுவும் ஒன்று. வழக்கம் போல அறிவியலைக் கலந்து பரிமாறி இருக்கிறார் லோகேஷ் ரகுராமன். இதோ கதை கீழே. https://www.aroo.space/2021/11/27/%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/ நம் கதாநாயகன் பெங்களூரில் ஒரு IT நிறுவனத்தில் பணிபுரிகிறார். மனிதர்களைப் பார்த்துப் பார்த்து சலித்துப்போன அவன் உத்தர கர்னாடகாவில் உள்ள ஒரு மலைப் பகுதிக்கு வருகிறான். காலா நதி உற்பத்தி ஆகுமிடம் அது. அந்த மலைக் காடுகளில் மலை ஏற அனுமதி கிடைப்பது கடினம். ஷைலேந்திரா கதாநாயகனுடன் பணியாற்றியவர். திடீரென ஒரு நாளில் வேலையை விட்டுவிட்டு மலை ஏறும் குழுக்களுக்கு வழிகாட்டியாக ஆகி விடுகிறான். அவன், "நான்கு சுவர்களுக்கு அப்பாலேதான் வாழ்க்கை" என்பான். நான் ரசித்து அனுபவித்த வரி அது. அற்புதமான உண்மை. ஷைலேந்திரா நம் கதாநாயகனை 'மகா' என்றழைக்கிறார். அதனால் கதாநாயகன் பெயர் மகாதேவனாகவோ அல்லது மகாலிங்கம் ஆகவோ இருக்கலாம். பரவாயில்லை. அது நமக்கு ...