கூடடைதல் - கதை (2) லோகேஷ் ரகுராமன்
கூடடைதல் என்றால் இரை தேடி வானில் பறந்து திரியும் பறவைகள் மாலையில் தன் கூட்டை அடைதல் என்று பொருள்படும். வழக்கம் போலவே முதலில் கதையின் இணைப்புக் கண்ணியைக் கீழே தந்துள்ளேன். முழுமையாகப் படித்துவிட்டுப் பின்னர் கதையைப் பற்றிய என் பார்வையைப் படித்தல் சிறப்பாக இருக்கும். https://www.facebook.com/story.php?story_fbid=33849177108063644&id=100001943649284 உண்மையில் சிறுகதை என்ற பெயருக்கு ஏற்ப மிகச் சிறிய கதையே. கதாநாயகன் பனிரெண்டு வயது முதல் இருந்து முப்பத்திரண்டு வயது வரை எந்தப் பொறுப்பும் இன்றி அரைப் பாக்கெட் சிகரெட் பிடித்தும், தூங்கியும், ஆற்றங்கரை மண்டபத்திலும் கழித்தவன். இப்போது எட்டாயிரம் ரூபாய் சம்பளத்தில் தொலைவாக இருக்கும் ஒரு ஊரில் வேலை செய்கிறான். அப்படி விட்டேத்தியாகப் பொறுப்பின்றி வாழ்ந்தவனையும் ஒருத்தி திருமணம் செய்து கொள்கிறாள். லோகேஷ் ரகுராமன் கதையில் வரும் பெண் பாத்திரங்கள் அதிகம் பேசாத உணர்ச்சிகளை வெளிக்காட்டாமல் எதையும் அப்படியே ஏற்றுக்கொண்டு கடந்து செல்லும் தன்மை கொண்டவர்களாகச் சித்தரிக்கப்படுகிறார்கள். இந்தக் கதையிலும் அப்படியே. கதாநாயகன் தன் வீட்டி...