இடிந்த வானம் - கதை ( 9) - லோகேஷ் ரகுராமன்
இது காதல் மணம் செய்து கொண்டஇளம் தம்பதிகளின் கதை. மனைவி அம்பரி ஒரு கட்டிட வடிவமைப்பாளர் (ARCHITECT). கணவன் சரண் ஒரு கணினி மென்பொருள் பொறியாளர். வழக்கம் போல் கதையின் இணைப்புக் கண்ணி கீழே. கதையை முழுமையாகப் படித்த பின்னர் கதை குறித்த என் பார்வையைப் படிப்பதே சிறந்தது. https://kanali.in/idintha-vaanam/ கணவன் மனைவி இருவரும் இடையே நடக்கும் உரையாடல்களே கதையை நகர்த்திச் செல்கிறது. அவரவருக்கான வானம் என்பது மனைவி தனது புதிய கட்டட வடிவமைப்புக்கு கொடுக்கும் தலைப்பு. வானத்தையும் அதன் நீல நிறத்தையும் பெரிதும் நேசிக்கும் அவரது பொழுதுபோக்கு வானை விதவிதமாகப் படம் வரைவது. கணவனிடம் புதிய கட்டட வடிவமைப்புக்கு அவளுக்குக் கிடைத்த அங்கீகாரம் மற்றும் பணியாணை(work order)க்குப் பாராட்டை எதிர்பார்க்கிறார். அவரது கைகளைப் பிடித்து முத்தமிட்டும் பாராட்டுச் சொல்லும் கணவனிடம் அவர்களின் காதலித்த நாட்களை நினைவூட்டுகிறார். அப்போது இருந்த மகிழ்ச்சி இப்போது இல்லை. அவரவர் வேலை அவர்களுக்கு என்று இருவரும் விலகிப் போய் விட்டதாக கணவன் சொல்கிறார். மேலும் மனைவி வரைந்த படங்கள் எதிலுமே மேகங்கள் இல்லாத பொட்ட...