Posts

கடல் கனித்தது - கதை(11) - லோகேஷ் ரகுராமன்

Image
       ‌                    வில்லுண்டித் தீர்த்தம் இரண்டு தலைமுறைகளுக்கு முந்தைய கதை என்று சொல்லலாம். தன் தந்தையைப் பராமரிக்கும் மகள். அவளது தாயை எவ்வளவு அலட்சியமாகத் தன் தந்தை நடத்தினார் என்பதைச் சுட்டிக் காட்டுகிறார். அம்மாவின் மாதவிலக்கு நாட்களில் குடிக்கக் தண்ணீர் கேட்டால் கண்டும் காணாதது போல இருந்து விடுவார். சரி அவர்தான்  எடுத்துத் தரவில்லை. வேறு யாரையாவது அழைத்துக் கூடத் தரச் சொல்ல மாட்டார். மறந்த போனது போல இருந்து விடும் ஆண்களின் ஆணவம். அம்மாவின் அப்பாவும் அம்மாவும் இவரிடம் தங்கள் மகள் படும் பாட்டை மனதுக்குள் வைத்துக் கொண்டு மறுகுவார்கள். தன் பிள்ளைகளுக்கு நல்ல தகப்பன். ஆனால் மனைவிக்கு நல்ல கணவனாக இல்லை என்பதைச் சொல்ல வரும் மகள் தன் கணவன் அவளைக் கொடுமைப் படுத்தினால் எவ்வளவு எவ்வளவு மனவேதனை அடைவார் என்கிறார்.‌ நல்ல வேளை அப்பா மாதிரி ஒரு கணவன் தனக்கு வாய்க்கவில்லை என்கிறாள். சாம்பாரில், ரசத்தில் உப்பு அதிகம் போட்டிருக்கிறாய். வாயில் வைக்க முடியவில்லை கரிக்கிறது என்று பிரச்சினை செய்கிறார் அந்த முதியவர். நாளா...

கனகாபிஷேகம்

Image
  இங்கு நான் சொல்லப் போவது என் பிறப்புக்கும் முன்பு நடந்தது. என் தாய்வழிப் பாட்டியின்  குடும்பம் பெரிய செல்வந்தக் குடும்பம்.‌ என் பாட்டியின் அம்மாவின் கணவர் மகா கோபக்கார மனிதன்.  வீட்டின் பெண் பிள்ளைகளை கிஞ்சிற்றும் மதிப்பது கிடையாது.‌ அவருக்கு எதிராக யாருமே வாய்திறக்க முடியாது.  அந்தக் காலத்தில் செல்வந்தர்கள் மனைவியைத் தவிர வேறு பெண்ணுடன் தொடர்பு வைத்துக் கொள்வதெல்லாம் பெரிய குற்றமாக ஆணாதிக்கச் சமுதாயத்தில் பார்க்கப்படவில்லை. என் னுடைய அந்தக் கொள்ளுத் தாத்தாவும் அப்படி ஒரு தொடுப்பு வைத்திருந்தாராம். ஆனால் அது கண்கூடாகத் தெரிந்தும் அவரை நேரடியாகக் கேள்வி கேட்க அனைவரும் பயந்தனர் என்பதே உண்மை. கொள்ளுப்பாட்டி ஒரு பிள்ளைப் பூச்சி. விதியை ஏற்றுக்கொண்டு வாழ வேண்டிய‌ நிர்பந்தம்.  சொல்லப் போனால் லோகேஷ் ரகுராமனின் " கடல் கனித்தது" கதையில் வரும் முதியவர் எவ்வளவோ தேவலை.  அப்போதெல்லாம் தொடுப்பு வைத்துக் கொள்வதை நான் சார்ந்த சமூகம் தனது அந்தஸ்தைப் பறைசாற்றும் வகையில்தான் எடுத்துக் கொண்டு இயல்பாகக் கடந்து சென்றது.  எல்லாத் தவறுகளும் நிச்சயமாக ஒரு காலகட்டத்தில் முடிவ...

கறை - கதை (9) - லோகேஷ் ரகுராமன்

Image
இந்தக் கதை 2022 ஆம் ஆண்டில் கர்நாடகாவில் ஒரு கல்லூரியில் நடைபெற்ற  நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது என்றே நினைக்கிறேன். கதையின் இணைப்புச்‌ சுட்டி கிடைக்கவில்லை. லோகேஷ் ரகுராமன் சாரிடமிருந்து பெற்று  விரைவில் இணைக்கிறேன்.  கறை என்பது  மத வெறியர்களால் மதத்தின் பெயரால் ஏற்பட்ட கறையா? அல்லது அந்த அப்பாவி இஸ்லாமிய மாணவியின் புர்காவில் ஏற்பட்ட கறையா? என் வரையில் நம் அனைவரது மீதும் படிய வைக்கப்பட்ட கறை என்றே தோன்றுகிறது. கல்லூரியில் படிக்கும் சற்று வெகுளித்தனமான பெண். அவளது மென்மையான இயல்பு எல்லாம் அழகாக சொல்லப்பட்டுள்ளது. பொதுவாகவே பள்ளியலும் கல்லூரியிலும் படிக்கும் காலத்தில் எல்லாப் பெண்களுமே செல்லமாகவும், சோம்பேறித்தனமாகவுமே இருப்பார்கள். என் மகள் கூட அப்படித்தான். வீட்டு வாசலில் ஆட்டோ வந்த பின்புதான் காலை உணவை வாயில் திணித்துக் கொண்டு ஷூவைக் கையில் தூக்கிக் கொண்டு ஓடுவாள். இங்கும் அதே கதைதான். குளிக்கப் போனாலும் அதிக நேரம் எடுத்துக் கொள்வது. எல்லாம் நம் வீட்டின் செல்லப் பெண்களை அப்படியே அச்சு அசலாகக் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது. புர்கா தினமும்‌ அ...

பொன்மார் - கதை (7) லோகேஷ் ரகுராமன்

Image
  முதலில் கதையின் இணைப்புக் கண்ணி.  https://lokeshraghuraman.wordpress.com/2017/09/08/ponmaar-short-story/ கதை உங்களுக்கு அதிர்ச்சி தரலாம். ஆனாலும் ஆணின் சுயநலத்தைக் காட்டும் கதையாகவே இதை நான் எடுத்துக் கொண்டேன்.  எல்லாரோட எழுத்திலும் எல்லாம் இருக்கும். இர்விங் வாலஸின் "SEVEN MINUTES"  ஹெரால்டு ராபின்ஸின் "A STONE FOR DANNY FISHER" இவற்றைச் சுட்டலாம். அது போலத்தான் லோகேஷ் ரகுராமனின் பொன்மாரையும் பார்க்கிறேன். இனி என் பார்வையில் பொன்மார் கதையைக் காண்போம்.  கல்கத்தா நகரின் சிவப்பு விளக்குப் பகுதி சோனாகாச்சியின் பின்புலத்தில் கதை சொல்லப் படுகிறது.  கதாநாயகன் இளைஞன். காமத்தை அனுபவிக்கத் துடிக்கும் வயது. வாழ்கையின் பல நேரங்களில் தோல்வியைச் சந்தித்த அவனுக்கு காமத்தை ருசிப்பதே வடிகால் எனத் தோன்றுகிறது.  பேருந்தில் சோனாகாச்சியின் 11000 பாலியல் தொழிலாளர்களின் வாழ்வாதாரப் பிரச்சினையான நாப்கின்னுக்கு விதிக்கப்பட்ட GST பற்றிச் சக பயணி அவனிடம் கூறுகிறார். பேருந்தில் கூட்டமாக ஏறும் பாலியல் தொழிலாளர்கள் GST க்கு எதிரான தங்கள் எதிர்ப்பைக் காட்ட ஆண்களுக்கு ராக்கி கட்டி...

செப்டம் - கதை (6) லோகேஷ் ரகுராமன்

Image
 அரோமா சிறுகதைத் தொகுப்பு நூலில் இது ஆறாவது கதை.  கதைக்கான இணைப்புக் கண்ணி கீழே உள்ளது. https://tamizhini.in/2021/12/24/%e0%ae%9a%e0%af%86%e0%ae%aa%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d/ சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர்  பூம்புகார் சென்றிருக்கிறேன். அப்போதே சரியான கவனிப்பின்றி இருந்ததைக் காண முடிந்தது.கதையில் பூம்புகாரின் இப்போதைய நிலையை லோகேஷ் ரகுராமன் கண்முன் நிறுத்துகிறார். நல்ல சுற்றுலாத் தலமாக விளங்கியிருக்க வேண்டியது இப்போது சீர்குலைந்து போட்டிருப்பதை உணர முடிகிறது.‌ நல்லதோர் வீணை நலம் கெடப் புழுதியில். சிலப்பதிகாரத்தில் வரும் ஐம் பெரும் மன்றங்களில் ஒன்று நெடுங்கல் மன்றம்.‌  சிறு வயது முதலே எலிப் பொந்து போன்ற வீட்டில் வசித்த அவனுக்கு விஸ்தாரமான இடத்தில் வசிக்க வேண்டும் என்ற‌ ஆசை.‌ நெடுங்கல் மன்றத் தூண்களுக்கு இடையில் நிறையவே இடம் விட்டு விசாலமாகக் கட்டியிருக்கலாம் என்ற இடத்தில் கதாநாயகனின் இந்த ஆதங்கம் வெளிப்படுகிறது நெடுங்கல் மன்றத்தை பட்டப் பகலில் பொது இடம் என்றும் பாராமல் வெட்கமின்றிக் காம இச்சையை தீர்த்துக் கொள்ளும் இளம் ஜோடிகளை தெரு நாய்களுக்கு ஒப்பிடுவதும...

ஒளி நிறைந்தவர்கள் கதை(5) - லோகேஷ் ரகுராமன்

Image
  பணி நிறைவு செய்த இயற்பியல் ஆசிரியரான என்னை அதிகம் ஈர்த்த கதைகளில் இதுவும் ஒன்று. வழக்கம் போல அறிவியலைக் கலந்து பரிமாறி இருக்கிறார் லோகேஷ் ரகுராமன். இதோ கதை கீழே. https://www.aroo.space/2021/11/27/%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/ நம் கதாநாயகன் பெங்களூரில் ஒரு IT நிறுவனத்தில் பணிபுரிகிறார். மனிதர்களைப் பார்த்துப் பார்த்து சலித்துப்போன  அவன் உத்தர கர்னாடகாவில் உள்ள ஒரு மலைப் பகுதிக்கு வருகிறான். காலா நதி உற்பத்தி ஆகுமிடம் அது.‌ அந்த மலைக் காடுகளில் மலை ஏற அனுமதி கிடைப்பது கடினம். ஷைலேந்திரா கதாநாயகனுடன் பணியாற்றியவர்.  திடீரென ஒரு நாளில் வேலையை விட்டுவிட்டு மலை ஏறும் குழுக்களுக்கு வழிகாட்டியாக ஆகி விடுகிறான். அவன், "நான்கு‌ சுவர்களுக்கு அப்பாலேதான் வாழ்க்கை" என்பான்.‌ நான் ரசித்து அனுபவித்த வரி அது. அற்புதமான உண்மை. ஷைலேந்திரா நம் கதாநாயகனை 'மகா' என்றழைக்கிறார்.‌ அதனால் கதாநாயகன் பெயர் மகாதேவனாகவோ அல்லது மகாலிங்கம் ஆகவோ இருக்கலாம். பரவாயில்லை.‌ அது நமக்கு ...

நிழல் - கதை(3) - லோகேஷ் ரகுராமன்

Image
  'விஷ்ணு வந்தார்' புத்தகத்தில் இரண்டாவது கதையான 'அது நீ' கதையை  நீங்கள் படித்திருப்பீர்கள். அந்தக் கதையை லோகேஷ் ரகுராமன் மறைபொருள்‌ எதார்த்தவாத (MYSTICAL REALISM) பாணியில் வடிவமைத்திருப்பார். இந்த நிழல்கள் கதையில் மாய எதார்த்தப் (MAGICAL REALISM) பாணியைப் பயன்படுத்தியிருக்கிறார். அதென்ன மறை பொருள் எதார்த்தவாதம் , மாய எதார்த்தம்? என்ன வேறுபாடுகள் இவற்றுக்கிடையில் என்ற எண்ணம் நமக்குத் தோன்றுவது தவிர்க்க இயலாது. மாயாஜால அல்லது  மாய யதார்த்தவாதம் (Magical Realism) என்பது சாதாரண நிஜ வாழ்க்கையில் மாயாஜால நிகழ்வுகள் சாதாரணமாக நடப்பது போல் எழுதுவது.  மறைபொருள் யதார்த்தவாதம் (Mystical Realism) என்பது ஆன்மீகம், பிரபஞ்ச சக்தி அல்லது மத நம்பிக்கைகளை மையமாகக் கொண்டு, உலகத்தை ஒரு மாயக் கண்ணோட்டத்தில் பார்ப்பது. லோகேஷ் ரகுராமன் ஏசுவின் உயிர்த்தெழுதல் என்னும் (Resurrection ) மத நம்பிக்கையை மையமாகக் கொண்டு கதை 'அது நீ' கதையைப் புனைந்திருப்பார். இந்த நிழல் புனைவில் அது போன்ற மத நம்பிக்கையைச் சார்ந்த விஷயங்கள் எதையும் சேர்த்து எழுதவில்லை. ஆகவே இக்கதையை மேஜிக்கல் ரியலிசம் என்றே நா...