அநிச்சயக்கரை - சிறுகதைத் தொகுப்பு - கதை(3) - லோகேஷ் ரகுராமன்
மணிகர்ணிகா கட்டப் படித்துறை - காசி இந்தச் சிறுகதைத் தொகுப்பில் மொத்தம் இருபது சிறுகதைகள் உள்ளன. அவற்றில் இரண்டு என் மனதைத் தொட்டு என்னவோ செய்தன. முதலில் அவற்றை மட்டும் என் பார்வையில் பதிவிடுகிறேன். முதல் கதை - உலர்தல். கதையில் கையில் காசில்லாத ஒருவன் தன் தந்தையின் ஆசைப்படி அவரது சடலத்தை எப்படி எரியூட்டுகிறான் என்று கூறுகிறது. அவன் சடலத்தை ஏற்றி வந்த மீன் பாடி வண்டிக்கே தேவையான அளவு பணம் கொடுக்க முடியாத நிலையில் சண்டையிடுகிறான். மீன் பாடி வண்டியோட்டி அவன் தந்தையின் சடலத்தை மணிகர்ணிகா கட்டத்தின் படியில் கொண்டு போட்டு விடுகிறான். அன்று இரவு முழுவதும் சரியான மழை. படியில் கிடத்தப்பட்ட சடலம் இரவு முழுவதும் மழையில் நனைந்தவாறு இருக்கிறது. அவனும் சடலத்தின் கால்மாட்டில் இரவு முழுவதும் நினைத்தவாறே இருக்கிறான். ஒரு அகோரி சடலத்தை இலவசமாக எரித்துத்தர ஒப்புக் கொள்கிறார். ஆனால் மழையும் விடவில்லை. முந்தைய நாள் தகன மேடையில் எரியும் பிணமே முற்றிலுமாக எரியவில்லை. அவனுக்கோ தன் தந்தையின் பிணத்தை எரித்து முடிக்க வேண்டும் என்று அகோரியை நச்சரிக்கிறான். ஈரமாக இருந்தாலும் தன்னுடைய தந்தையின் உடல் எளிதில் எ...