பொது இடங்களில் இம்சைகள்
பொது இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை ஒரு பாடமாக பள்ளிகளில் வைத்து விடலாம். காரணம் நம்மாட்கள் செய்யும் அட்ராசிட்டி. என் கண்ணில் பட்ட சில நிகழ்வுகளில் நம் மக்கள் எவ்வளவு சுயநலமாக அடுத்தவரைக் குறித்துக் கவலையே படாமல் இருக்கிறார்கள் என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். ஒருவகையில் வட இந்தியர்களை விட நாம் பரவாயில்லை. வட இந்தியாவில் சுயநலமிக்க மக்கள் அதிகம் என்பது என் கருத்து. பிக் பாக்ஸர்கள் (BIG BOXERS) அதாவது பெரிய பெட்டிக்காரர்கள். முதலாவதாக ரயில் பயணங்களில் லக்கேஜ் எடுத்துவரும் பயணிகள் குறைந்தபட்சமாக இரண்டு சூட்கேஸ்களாவது எடுத்து வருகிறார்கள். டறள திரும்பும் பயணிகள் பெரிய ஜம்போ சைஸ் சூட்கேஸ்கள் நாலைந்து எடுத்து வருவார்கள். அந்த சூட்கேஸ்களில் சராசரியாக அறுபது கிலோ நிறையுள்ள ஒருவரை நாலாக மடித்து உள்ளே வைத்து விடலாம். அத்தனை பெரிசாக இருக்கும். இவர்கள் எல்லாம் ரயில் வந்து நின்றதும் முண்டியடித்துக் கொண்டு லக்கேஜுடன் ஏறி லக்கேஜ் வைக்கும் இடத்தை நிரப்பி விடுவார்கள். ( அடுத்தவரை ஏறவே விட மாட்டார்கள்). சரி இவர்களுக்கு வழி விட்டு பின்னர் ஏறும் என் போன்ற புஜபல ...