Posts

Image
முன்னுரை என் நண்பர் சிவசாமி அவர்கள், சமூகவியலிலும், நிர்வாக இயலிலும் முதுநிலைப் பட்டப்படிப்புப் படித்தவர். அரசுப்பணியில் உயர்ந்த பதவிகள் பலவற்றை வகித்தவர். மிகச் சமீபத்தில் ஓய்வு பெற்றவர். சென்னை அண்ணாநகர் விஸ்வேஸ்வரய்யா கோபுரத்தைச் சுற்றி வந்து தினசரி நடைப் பயிற்சி செய்யும் போது அறிமுகமானார். நல்ல பண்பான மனிதர்தான் அவர், ஆனால் அவருக்கு மருத்துவர்கள் மீதும் அவர்கள் தரும் பரிசோதனைகள் குறித்தும் பெரும் அவநம்பிக்கையும் ஐயப்படும் மனதில் இருப்பதை அவருடன் உரையாடும் போது அறிந்து கொண்டேன். அது குறித்துச் சில சமயம் நாங்கள் இருவரும் விவாதித்துள்ளோம். மருத்துவர்கள் பரிந்துரைக்கும் ஆய்வுகள் அனைத்துமே அனாவசியமானவை, தண்டச் செலவு என்ற தவறான எண்ணம் அவருக்கு மட்டுமல்ல, பொதுவாகவே அனைத்துத்தரப்பு   மக்களிடமும் காணப்படுகிறது. ஒரு நோயாளி, திடீரென மருத்துவர் முன்பு போய் நின்று கொண்டு “எனக்கு என்ன நோய் என்று கண்டுபிடியுங்கள்” என்றால் அவரால் நிச்சயமாகக் கண்டுபிடிக்கவே இயலாது. முதலில் நோயாளி தனக்கு இருக்கும் உடல் ரீதியான உபாதைகளை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும். அடுத்து அவற்றைக் கொண்டு ஓரளவு நோயாளியி...

இரத்தச் சர்க்கரைச் சோதனைகளின் (Blood Sugar Tests) முக்கியத்துவம்

Image
இரத்தச் சர்க்கரைச் சோதனைகள் (Blood Sugar Tests) என்பவை   நம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை மதிப்பிடும் ஒரு வழிமுறையாகும். இச் சோதனைகளை உங்களுக்கு மருத்துவர் நீரிழிவு நோயைக் (Diabetes) கண்டறியப் பரிந்துரைக்கலாம். மேலும் இச் சோதனைகள் நீரிழிவு நோய் உள்ள நோயாளிகளும் தங்களது நோயின் நிலையை கட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவுகின்றன. இரத்தச் சர்க்கரைச் சோதனை தரக் கூடிய உடனடியான   முடிவுகள் வாயிலாகக் கிடைக்கும் நற்பயன்கள் 1) நமது வழக்கமான உடற்பயிற்சி அல்லது உணவில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் 2) நீரிழிவு நோய்க்காக எடுத்துக் கொள்ளும் மருந்தின் செயல்பாடு 3) இரத்தச் சர்க்கரையின் அளவு குறைவாக உள்ளதா அல்லது அதிகமா உள்ளதா என்றறிதல் 4) நீரிழிவு நோய்க்கான ஒட்டு மொத்த சிகிச்சையின் இலக்கை நிர்வகித்தல் ஆகியன. மருத்துவர் இரத்தச் சர்க்கரைச் சோதனையை வழக்கமான சோதனையாகக் கூடப் பரிந்துரைக்கலாம். இதனால் அவர் நோயாளி நீரிழிவு நோய்க்கு முந்தைய கட்டத்தில் (Prediabetes) உள்ளாரா அல்லது நீரிழிவு நோயை (Diabetes) அடைந்து விட்டாரா என அறிந்து கொள்ள இயலுகிறது. இரத்தச் சர்க்கரைச் சோதனை என்...

தொலைக்காட்சியா இல்லை தொல்லைக்காட்சியா

Image
 காலையில் பெரும்பாலான  தினங்களில் நடைப்பயிற்சி முடித்து வீட்டுக்கு வந்து வியர்வை ஆற்ற தொலைக்காட்சி முன் உட்கார வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அப்போது மெகா டிவியில் அமுதகானம் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும்.‌ வேறு வழியின்றி அதைக் காண்பது வழக்கம். இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குபவர் திரு.‌ ஆதவன் என்பவர்.‌ இவர் கிட்டத்தட்ட 6000 எபிசோட் களை வழங்கியுள்ளதாகவும் தெரிகிறது.‌ ஆனால் அவரது நிகழ்ச்சித் தொகுப்பு எந்த மாற்றமும் இல்லாமல் ஒரே மாதிரியாகவே நிகழ்ச்சி  தொடங்கிய அன்றிலிருந்து இன்றுவரை நடந்து கொண்டு இருக்கிறது.‌  தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவ்வப்போது காலத்துக்கு ஏற்ப மாற்றம் செய்யப்பட வேண்டும். சும்மா கை விரல்களால் வித்தை காட்டியும், ஏற்கெனவே போட்டுப் போட்டு கேட்டலுத்துப் போன திரைப்படப் பாடல்களையே வழங்கி வருகிறார்.‌ பார்க்கிற நமக்கு வெறுத்துப் போய் விடுகிறது.‌ மொத்தமே ஒரு இருபது முப்பது பாடல்கள்தான்.‌ அவற்றையே நிகழ்ச்சியில் வரிசை மாறிப் போடுவது சலிப்பூட்டுகிறது.‌  ஆதவன் அவர்கள் தன்னுடைய நிகழ்ச்சி நடத்தும் விதத்தை விரைவில் மாற்றிக் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்...

விஷ்ணு வந்தார் - கதை (1) - லோகேஷ் ரகுராமன்

Image
 லோகேஷ் ரகுராமனுக்கு கதை சொல்வதில் எந்தத் தடுமாற்றமும் இல்லை. தஞ்சாவூர் வாத்திமா பிராமணர்கள் அவர்களின்‌ ஆதி வரலாறு, அவர்களின் பதினெட்டு ஊர்கள், சடங்குகள் என்று பிரித்து மேய்ந்து இருக்கிறார். சில தகவல்கள் இதுவரை கேள்விப்படாதவை.‌ வாத்திமர் என்பது மத்யமரிலிருந்து மருவிய சொல் என்பது. நாகார்ஜுனரால் ஏற்படுத்தப்பட்ட பெளத்த மதத்து மாத்யாமீகம் பிரிவு அத்வைத தத்துவத்தை ஒத்திருந்ததால் அவர்களை கெளடபாதர் அத்வைதத்தில் இணைத்தார்.‌ பின்னாளில் ஆதி சங்கரரும் அதை ஏற்றுக் கொண்டார் என்ற தகவல் அப்படிப்பட்டதே. மற்றொரு சுவாரசியமான கதை அரசலாற்றின் பெயர் காரணக் கதை.‌ விஷ்ணு சக்கராயுத்தைத் தொலைத்து விட்டு வீழிமலை சுவாமியைத் தவமிருந்து பெற்றது.‌ விஷ்ணு வந்த ஊர் என்பதால் விஷ்ணுபுரம் என்ற பெயர் வந்த காரணம், அரிசொல் ஆறு என்பதே அரசலாற்றாக மருவியது எல்லாம் அந்த ரகம். கதை மாந்தர்கள் மொத்தமாக ஏழு பேர்தான்.‌ விஸ்வநாதையர், சாம்பமூர்த்தி, வீழி சார் என்ற ரிட்டரயர்ட் பள்ளிக்கூட வாத்தியார் வீழிநாதன், இறந்து போய் விட்ட தக்காளி சுவாமிநாதன், அவருக்கு ஸ்ரார்த்தம் செய்ய ஊருக்கு வருடந்தோறும் வரும் அவருடைய தத்துப் புத்திரன் ஆடிட...