அன்னம் - கதை (6) - லோகேஷ் ரகுராமன்
வழக்கம் போல கதையின் wordpress இணைப்புக் கண்ணியைக் கீழே தந்துள்ளேன். கதையை முழுவதும் படித்து விட்டு அதன்பின் என் பார்வையில் கதையை குறித்து எழுதியுள்ளதைப் படிக்கவும். https://wp.me/p14lnH-rT இந்த அன்னம் மிகச் சிறிய கதை. இதுவரை நான் படித்த லோகேஷ் ரகுராமனின் கதைகளில் இதுதான் அதிக ஆழமில்லாத கதைக் களத்தைக் கொண்டது என்று சொல்வேன். நடுத்தர வர்க்கத்தின் கதை என்று சொல்ல முடியும். கதையில் முதியவர் ஒருவர் வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள மளிகைக் கடையில் அரிசி வாங்குகிறார். அரிசியைக் கொஞ்சம் கொஞ்சமாக தேவைக்கேற்ப வாங்கலாம் என்ற மனைவியின் பேச்சைக் கேட்காமல் ஒரேயடியாகப் பத்து கிலோ அரிசியை வாங்கி விடுகிறார். வாங்கிய அரிசி மூட்டை பிரிக்கப்படாமலேயே மூன்று தினங்கள் ஒடி விடுகிறது. முதியவரின் மகன் பிரித்து வேறு பாத்திரத்திற்கு மாற்றிய போது அரிசியில் பழவாடை அடிப்பதும் சாக்கு மூட்டை ஈரித்திருப்பதும் தெரிகிறது. மகன் அரிசிப் புழுக்கூடுகளைக் கண்டதும் கடைக்கு மாற்றித் தருவதற்காக எடுத்துச் செல்கிறார் கடைக்காரர் மற்றும் அவரது மனைவி இருவரும் சற்றுக் கறாரானவர்கள். அவர்கள் இருவரும் கெட்டுப்போன அரிசி...