Posts

இரத்தச் சர்க்கரைச் சோதனைகளின் (Blood Sugar Tests) முக்கியத்துவம்

Image
இரத்தச் சர்க்கரைச் சோதனைகள் (Blood Sugar Tests) என்பவை   நம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை மதிப்பிடும் ஒரு வழிமுறையாகும். இச் சோதனைகளை உங்களுக்கு மருத்துவர் நீரிழிவு நோயைக் (Diabetes) கண்டறியப் பரிந்துரைக்கலாம். மேலும் இச் சோதனைகள் நீரிழிவு நோய் உள்ள நோயாளிகளும் தங்களது நோயின் நிலையை கட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவுகின்றன. இரத்தச் சர்க்கரைச் சோதனை தரக் கூடிய உடனடியான   முடிவுகள் வாயிலாகக் கிடைக்கும் நற்பயன்கள் 1) நமது வழக்கமான உடற்பயிற்சி அல்லது உணவில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் 2) நீரிழிவு நோய்க்காக எடுத்துக் கொள்ளும் மருந்தின் செயல்பாடு 3) இரத்தச் சர்க்கரையின் அளவு குறைவாக உள்ளதா அல்லது அதிகமா உள்ளதா என்றறிதல் 4) நீரிழிவு நோய்க்கான ஒட்டு மொத்த சிகிச்சையின் இலக்கை நிர்வகித்தல் ஆகியன. மருத்துவர் இரத்தச் சர்க்கரைச் சோதனையை வழக்கமான சோதனையாகக் கூடப் பரிந்துரைக்கலாம். இதனால் அவர் நோயாளி நீரிழிவு நோய்க்கு முந்தைய கட்டத்தில் (Prediabetes) உள்ளாரா அல்லது நீரிழிவு நோயை (Diabetes) அடைந்து விட்டாரா என அறிந்து கொள்ள இயலுகிறது. இரத்தச் சர்க்கரைச் சோதனை என்...

தொலைக்காட்சியா இல்லை தொல்லைக்காட்சியா

Image
 காலையில் பெரும்பாலான  தினங்களில் நடைப்பயிற்சி முடித்து வீட்டுக்கு வந்து வியர்வை ஆற்ற தொலைக்காட்சி முன் உட்கார வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அப்போது மெகா டிவியில் அமுதகானம் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும்.‌ வேறு வழியின்றி அதைக் காண்பது வழக்கம். இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குபவர் திரு.‌ ஆதவன் என்பவர்.‌ இவர் கிட்டத்தட்ட 6000 எபிசோட் களை வழங்கியுள்ளதாகவும் தெரிகிறது.‌ ஆனால் அவரது நிகழ்ச்சித் தொகுப்பு எந்த மாற்றமும் இல்லாமல் ஒரே மாதிரியாகவே நிகழ்ச்சி  தொடங்கிய அன்றிலிருந்து இன்றுவரை நடந்து கொண்டு இருக்கிறது.‌  தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவ்வப்போது காலத்துக்கு ஏற்ப மாற்றம் செய்யப்பட வேண்டும். சும்மா கை விரல்களால் வித்தை காட்டியும், ஏற்கெனவே போட்டுப் போட்டு கேட்டலுத்துப் போன திரைப்படப் பாடல்களையே வழங்கி வருகிறார்.‌ பார்க்கிற நமக்கு வெறுத்துப் போய் விடுகிறது.‌ மொத்தமே ஒரு இருபது முப்பது பாடல்கள்தான்.‌ அவற்றையே நிகழ்ச்சியில் வரிசை மாறிப் போடுவது சலிப்பூட்டுகிறது.‌  ஆதவன் அவர்கள் தன்னுடைய நிகழ்ச்சி நடத்தும் விதத்தை விரைவில் மாற்றிக் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்...

விஷ்ணு வந்தார் - கதை (1) - லோகேஷ் ரகுராமன்

Image
 லோகேஷ் ரகுராமனுக்கு கதை சொல்வதில் எந்தத் தடுமாற்றமும் இல்லை. தஞ்சாவூர் வாத்திமா பிராமணர்கள் அவர்களின்‌ ஆதி வரலாறு, அவர்களின் பதினெட்டு ஊர்கள், சடங்குகள் என்று பிரித்து மேய்ந்து இருக்கிறார். சில தகவல்கள் இதுவரை கேள்விப்படாதவை.‌ வாத்திமர் என்பது மத்யமரிலிருந்து மருவிய சொல் என்பது. நாகார்ஜுனரால் ஏற்படுத்தப்பட்ட பெளத்த மதத்து மாத்யாமீகம் பிரிவு அத்வைத தத்துவத்தை ஒத்திருந்ததால் அவர்களை கெளடபாதர் அத்வைதத்தில் இணைத்தார்.‌ பின்னாளில் ஆதி சங்கரரும் அதை ஏற்றுக் கொண்டார் என்ற தகவல் அப்படிப்பட்டதே. மற்றொரு சுவாரசியமான கதை அரசலாற்றின் பெயர் காரணக் கதை.‌ விஷ்ணு சக்கராயுத்தைத் தொலைத்து விட்டு வீழிமலை சுவாமியைத் தவமிருந்து பெற்றது.‌ விஷ்ணு வந்த ஊர் என்பதால் விஷ்ணுபுரம் என்ற பெயர் வந்த காரணம், அரிசொல் ஆறு என்பதே அரசலாற்றாக மருவியது எல்லாம் அந்த ரகம். கதை மாந்தர்கள் மொத்தமாக ஏழு பேர்தான்.‌ விஸ்வநாதையர், சாம்பமூர்த்தி, வீழி சார் என்ற ரிட்டரயர்ட் பள்ளிக்கூட வாத்தியார் வீழிநாதன், இறந்து போய் விட்ட தக்காளி சுவாமிநாதன், அவருக்கு ஸ்ரார்த்தம் செய்ய ஊருக்கு வருடந்தோறும் வரும் அவருடைய தத்துப் புத்திரன் ஆடிட...

நடைப்பயிற்சி

Image
 நடைப்பயிற்சி  முதுகுத் தண்டில் காசநோய் தாக்கியதால் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளாக நடக்காமல் இருந்ததால் நடையில் தள்ளாட்டமும் தடுமாற்றமும் இருந்தது. நடைப்பயிற்சி செய்ய கோயம்பேட்டில் வசதியான பூங்காக்கள் கிடையாது. ஏசியன் கேம்ஸ் வில்லேஜ் வளாகத்தில் நடக்கலாம். ஆனால் தூரம் அதிகம்.  அங்கிருந்து நவம்பரில் நங்கநல்லூருக்கு வந்து பின்னர் நடைப்பயிற்சிக்கு நிறைய சிறிய பூங்காக்கள் இருக்கின்றன. என்ன பிரச்சினை  என்றால் செக்கு மாடு சுற்றுவது மாதிரி சுற்ற வேண்டும். நான் நாலு கிமீ நடக்க வீட்டின் அருகில் உள்ள பூங்காவில் 20 சுற்றுகள் வைக்க வேண்டியுள்ளது. பூங்காவில் காலை ஆறு மணிக்கு ஆஜர் ஆகி விடுவேன். அதிகம் கூட்டம் இருக்காது. என்னையும் சேர்த்து பத்து நபர்கள் இருந்தால் அதுவே பெருங்கூட்டம். இன்று நான் சென்றபோது வழக்கமாக வரும் கராத்தே மாஸ்டர் சப்தம் எழுப்பாமல் பரத நாட்டியம்  கற்றுக் கொள்ளும் பெண் போல் கைகளையும் கால்களையும் அசைத்து அபினயித்துக் கொண்டிருந்தார். பார்க்க வேடிக்கையாக இருந்தது. நானும் கடந்த மூன்று நாட்களாகப் பார்க்கிறேன், அவரிடம் பயிற்சி எடுக்க மாணவர்கள் யாரும் வருவதில்லை. ஒரு...
Image
 மனிதர்கள் (2) நல்ல மனிதர்கள் பலர் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.  என் மகளின் சூட்கேஸில் ஒரு பிரச்சினை.‌ அதை சரி செய்து தர வேண்டும் என்று இங்கே சென்னைக்கு கொண்டு வந்தாள்.  இது போன்ற பழுதுபட்ட பெட்டிகளை பழுது நீக்கி சரி செய்யும்  கடைகள் அண்ணா நகரில் நிறைய உண்டு.‌ நாங்கள் கோயம்பேட்டில் இருந்தபோது அண்ணா நகருக்குஎளிதாகப் போய் வர முடிந்தது. மெட்ரோ ரயிலில் சென்று திருமங்கலம் நிலையத்தில் இறங்கினால் சூட்கேஸ் பழுது நீக்கி சரி செய்து தரும் கடைகள் பல உள்ளன. க்ஷஇங்கே நங்கநல்லூருக்கு வந்து பின்னர் அண்ணா நகர் செல்வது எளிதாக இல்லை. மேலும் சற்றே அளவில் பெரிய பெட்டியை அண்ணா நகருக்கு மெட்ரோ ரயிலில் எடுத்துச் சென்று வருவது எளிதாக இருக்காது என்பது மற்றொரு காரணம்.  ஆகவே இங்கே நங்கநல்லூரிலேயே இருக்கும் சூட்கேஸ் பழுது பார்த்துக் தரும் கடைகளை இணையத்தில் தேடியதில் நாலைந்து கடைகள் தேறின. அவற்றை ஆராய்ந்து பார்த்ததில் ST BAG REPAIRING என்ற கடைக்கு 25 வாடிக்கையாளர்கள் ஐந்து புள்ளிகளை வழங்கி இருந்தனர். எனவே அந்தக் கடையில் சூட்கேஸை பழுது பார்த்து விடலாம் என்று முடிவெடுத்தேன். என் இல்லத்தி...
Image
 மனிதர்கள் (1) என் மகன் 2018 ஆம் ஆண்டில் மகாராட்டிர மாநிலத்தில் புனே நகரில் பணியாற்றி வந்தார். அப்போது அவருடன் நானும் என் மனைவியும் ஒரு மாதம் தங்கியிருந்தோம். புனே நகரில் காண வேண்டிய பல இடங்களில் உள்ளன.‌ என் மகன் அலுவலகம் செல்வதால் அவனது விடுமுறை நாட்களில் மட்டுமே எங்களை வெளியில் அழைத்துச் செல்ல முடியும் என்ற நிலை. எங்களுக்கு ஹிந்தியோ மராத்தியோ தெரியாது.  சரி இருக்கவோ இருக்கிறது ஆங்கிலம். அதை வைத்து நாமே புனே நகரில் உள்ள முக்கிய இடங்களைக் காணலாம் என்று முடிவு செய்தோம். புனேயின் புறநகர் பகுதியான கோந்துவா குர்த் (Kondhwa Khurd) என்ற இடத்தில் மகனின் இல்லம் இருந்தது.   முதல் கட்டமாக ஒரு தாளில் புனே நகரில் பார்க்க வேண்டிய இடங்களை இணையதளத்திலிருந்து பட்டியலிட்டோம்.‌ அன்று காலை உணவு உட்கொண்ட பின்னர் வீட்டின் அருகில் இருக்கும் ஆட்டோ ஸ்டாண்டில் உள்ள ஓட்டுநர் ஒருவரிடம் எனக்கு அரைகுறையாகத் தெரிந்த ஆங்கிலத்தில் அந்தப் பட்டியலைக் காட்டி அழைத்துச் செல்ல முடியுமா என்று கேட்டதும்  அவர் ஆங்கிலம் தெரியாது என்று ஒற்றை வரியில் பதிலளித்தார். அங்கிருந்த பிற ஓட்டுநர்களும் அப்படியே பதி...

நிஷ்கலங் மகாதேவ் ஆலயம்

மகாபாரதத்தில் குருஷேத்திரப் போரில் கௌரவர்கள் கொல்லப்பட்டு பாண்டவர்கள் வெற்றி அடைகின்றனர். போரில் வென்ற போதும் சொந்தபந்தங்களைக் கொன்ற பெரும் பாபம் அவர்களைச் சேர்ந்ததால் பாண்டவர்களின் மனதில் நிம்மதி இல்லாமல் போனது. இந்தப் பெரும் பாபம் நீங்கி விமோசனம் பெற வேண்டி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை அணுகி வழிகாட்ட வேண்டினர். பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் அவர்களிடம் ஒரு கருப்புப் பசுவையும் கருப்புக் கொடியையும் அளித்தார். கருப்புக் கொடியைப் பிடித்தபடி கருப்புப் பசுவைப் பின் தொடர் வேண்டும் என்றும், எந்த ஒரு இடத்தில் கருப்புக் கொடியும், கருப்புப் பசுவும் வெண்ணிறமாக நிறம் மாறுகிறதோ அந்த இடத்தில் பாபவிமோசனம் பெறச் சிவபெருமானை நோக்கித் தவமியற்றி வேண்டும் என்றும் அறிவுரை கூறினார். பாண்டவர்கள் ஐவரும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் அறிவுரைப்படி கருப்புப் பசுவின் பின்னே கருப்புக் கொடியைப் பிடித்தவாறு பல ஆண்டுகளாகப் பாரத தேசத்தின் பல இடங்களிலும் நடந்து வந்தனர். தற்போதைய குஜராத் மாநிலத்தில் பவ்நகர் (Bhavnagar) மாவட்டத்தில் உள்ள கோலியாக் (Koliyak)நகரத்தின் கடற்கரைக்கு வந்தபோது கருப்புக் கொடியும், கருப்புப் பசுவும் வெள்ளையாக நிறம் மா...

அதிக உடல் பருமன் ( Obesity)

Image
அதிக உடல் பருமன் (Obesity) என்பது பொதுவாகவே பிறரின் கேலிப் பேச்சுகளால்  மன உளைச்சலையும் அதே நேரம் உடல் ரீதியான பல பிரச்சனைகளையும் தரக் கூடியது. உடலின் எடை அதிகரித்தல் மட்டுமே அதிக உடல் பருமன் (Obesity) இல்லை. இது உடலில் கொழுப்பு சேகரமாவதால் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, கொலஸ்டிரால் மட்டுமல்லாமல்  புற்றுநோய்  தாக்கும் அபாயத்தைக் கூட அதிகரிக்கச் செய்யும் தீவிரமானதொரு மருத்துவ நிலை என்றும் சொல்லலாம்.   ருசித்து வயிறாரச் சாப்பிடக் கூட நேரமில்லாமல் மிகவும்  கஷ்டப்பட்டு உழைத்துப் பணம் சம்பாதித்து, அப்படிச் சம்பாதித்ததுச்  சேமித்த பணத்தை  வாயைக்கட்டி வயிற்றைக் கட்டி சேர்த்த பணம் என்று சொல்வது வழக்கம். உண்மையில் வாயைத் கட்டி வாழ்ந்தால் நிச்சயமாகப் பிற்காலத்தில் வயிற்றைக் கட்டி வாழ வேண்டி இராது என்று கொழு உடல் மருத்துவ இயல் அல்லது உடல் பருமனியல் மருத்துவம்  (Bariatric medicine) தெரிவிக்கிறது. உண்மையில் வாயைக் கட்டாமல் அதாவது கண்டவற்றையும் தேவையில்லாமல்  உட்கொண்டால் பின்னாளில் வயிற்றை இறுக்கிப் பிடித்துக் கட்ட வேண்டி வரும். இரைப்பைப் பட்டை அறுவ...

அண்ணா நகர் அனுபவங்கள்

Image
அண்ணாநகர் இரண்டாவது நிழற் சாலை சென்னையின் மிக அழகான சாலைகளில் ஒன்று . சுமார் இருபத்தைந்து ஆண்டுகள் முன்பு இச்சாலையில் தபால் அலுவலகத்திற்கு எதிரில் இருந்த ஒரு வீட்டு வசதி வாரிய அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்தேன்.  குடியிருப்பில் மொத்தம் ஐந்து அடுக்குகள். ஒவ்வொரு அடுக்கிலும் மூன்று தளங்கள். ஒவ்வொரு தளத்திலும் எதிரெதிராக இரண்டு வீடுகள். நான் 1988 முதல் 1994 வரையில் முதல் தளத்தில் கதவு எண் 342/4 வசித்தது வந்தேன்.  இரு படுக்கை அறை அடுக்ககம். இரண்டு பத்துக்குப் பத்து படுக்கை அறைகள் அதே அளவில் ஒரு வரவேற்பறை, சிறிய ஆனால் வசதியான சமையலறை என்று காற்றும் வெளிச்சமும் எல்லா அறைகளிலும் போதிய அளவில் கிடைக்கக் கூடிய வகையில்  நேர்த்தியான கட்டமைப்பை உடையது. கட்டுமானம் மிகத் தரமானது என்று சொல்ல இயலாத போதும் அடுக்ககத்தின் வளாகத்தில் முன்புறம் பாதுகாப்பாகக் குழந்தைகள்  விளையாட நிறையத் திறந்த வெளி, சாலையை ஒட்டி இருப்பதும் கடைகள் வங்கிகள் என பல வசதிகள் இருநூறு மீட்டர் தொலைவில் சரவண பவன்  நடைப்பயிற்சிக்கு விஸ்வேஸ்வரய்யா பூங்காவும் பக்திக்கு ஐயப்பன் கோவிலும் இருந்ததால் அந்த இட...