நடைப்பயிற்சி முதுகுத் தண்டில் காசநோய் தாக்கியதால் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளாக நடக்காமல் இருந்ததால் நடையில் தள்ளாட்டமும் தடுமாற்றமும் இருந்தது. நடைப்பயிற்சி செய்ய கோயம்பேட்டில் வசதியான பூங்காக்கள் கிடையாது. ஏசியன் கேம்ஸ் வில்லேஜ் வளாகத்தில் நடக்கலாம். ஆனால் தூரம் அதிகம். அங்கிருந்து நவம்பரில் நங்கநல்லூருக்கு வந்து பின்னர் நடைப்பயிற்சிக்கு நிறைய சிறிய பூங்காக்கள் இருக்கின்றன. என்ன பிரச்சினை என்றால் செக்கு மாடு சுற்றுவது மாதிரி சுற்ற வேண்டும். நான் நாலு கிமீ நடக்க வீட்டின் அருகில் உள்ள பூங்காவில் 20 சுற்றுகள் வைக்க வேண்டியுள்ளது. பூங்காவில் காலை ஆறு மணிக்கு ஆஜர் ஆகி விடுவேன். அதிகம் கூட்டம் இருக்காது. என்னையும் சேர்த்து பத்து நபர்கள் இருந்தால் அதுவே பெருங்கூட்டம். இன்று நான் சென்றபோது வழக்கமாக வரும் கராத்தே மாஸ்டர் சப்தம் எழுப்பாமல் பரத நாட்டியம் கற்றுக் கொள்ளும் பெண் போல் கைகளையும் கால்களையும் அசைத்து அபினயித்துக் கொண்டிருந்தார். பார்க்க வேடிக்கையாக இருந்தது. நானும் கடந்த மூன்று நாட்களாகப் பார்க்கிறேன், அவரிடம் பயிற்சி எடுக்க மாணவர்கள் யாரும் வருவதில்லை. ஒரு...
Posts
- Get link
- X
- Other Apps
மனிதர்கள் (2) நல்ல மனிதர்கள் பலர் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். என் மகளின் சூட்கேஸில் ஒரு பிரச்சினை. அதை சரி செய்து தர வேண்டும் என்று இங்கே சென்னைக்கு கொண்டு வந்தாள். இது போன்ற பழுதுபட்ட பெட்டிகளை பழுது நீக்கி சரி செய்யும் கடைகள் அண்ணா நகரில் நிறைய உண்டு. நாங்கள் கோயம்பேட்டில் இருந்தபோது அண்ணா நகருக்குஎளிதாகப் போய் வர முடிந்தது. மெட்ரோ ரயிலில் சென்று திருமங்கலம் நிலையத்தில் இறங்கினால் சூட்கேஸ் பழுது நீக்கி சரி செய்து தரும் கடைகள் பல உள்ளன. க்ஷஇங்கே நங்கநல்லூருக்கு வந்து பின்னர் அண்ணா நகர் செல்வது எளிதாக இல்லை. மேலும் சற்றே அளவில் பெரிய பெட்டியை அண்ணா நகருக்கு மெட்ரோ ரயிலில் எடுத்துச் சென்று வருவது எளிதாக இருக்காது என்பது மற்றொரு காரணம். ஆகவே இங்கே நங்கநல்லூரிலேயே இருக்கும் சூட்கேஸ் பழுது பார்த்துக் தரும் கடைகளை இணையத்தில் தேடியதில் நாலைந்து கடைகள் தேறின. அவற்றை ஆராய்ந்து பார்த்ததில் ST BAG REPAIRING என்ற கடைக்கு 25 வாடிக்கையாளர்கள் ஐந்து புள்ளிகளை வழங்கி இருந்தனர். எனவே அந்தக் கடையில் சூட்கேஸை பழுது பார்த்து விடலாம் என்று முடிவெடுத்தேன். என் இல்லத்தி...
- Get link
- X
- Other Apps
மனிதர்கள் (1) என் மகன் 2018 ஆம் ஆண்டில் மகாராட்டிர மாநிலத்தில் புனே நகரில் பணியாற்றி வந்தார். அப்போது அவருடன் நானும் என் மனைவியும் ஒரு மாதம் தங்கியிருந்தோம். புனே நகரில் காண வேண்டிய பல இடங்களில் உள்ளன. என் மகன் அலுவலகம் செல்வதால் அவனது விடுமுறை நாட்களில் மட்டுமே எங்களை வெளியில் அழைத்துச் செல்ல முடியும் என்ற நிலை. எங்களுக்கு ஹிந்தியோ மராத்தியோ தெரியாது. சரி இருக்கவோ இருக்கிறது ஆங்கிலம். அதை வைத்து நாமே புனே நகரில் உள்ள முக்கிய இடங்களைக் காணலாம் என்று முடிவு செய்தோம். புனேயின் புறநகர் பகுதியான கோந்துவா குர்த் (Kondhwa Khurd) என்ற இடத்தில் மகனின் இல்லம் இருந்தது. முதல் கட்டமாக ஒரு தாளில் புனே நகரில் பார்க்க வேண்டிய இடங்களை இணையதளத்திலிருந்து பட்டியலிட்டோம். அன்று காலை உணவு உட்கொண்ட பின்னர் வீட்டின் அருகில் இருக்கும் ஆட்டோ ஸ்டாண்டில் உள்ள ஓட்டுநர் ஒருவரிடம் எனக்கு அரைகுறையாகத் தெரிந்த ஆங்கிலத்தில் அந்தப் பட்டியலைக் காட்டி அழைத்துச் செல்ல முடியுமா என்று கேட்டதும் அவர் ஆங்கிலம் தெரியாது என்று ஒற்றை வரியில் பதிலளித்தார். அங்கிருந்த பிற ஓட்டுநர்களும் அப்படியே பதி...
நிஷ்கலங் மகாதேவ் ஆலயம்
- Get link
- X
- Other Apps
மகாபாரதத்தில் குருஷேத்திரப் போரில் கௌரவர்கள் கொல்லப்பட்டு பாண்டவர்கள் வெற்றி அடைகின்றனர். போரில் வென்ற போதும் சொந்தபந்தங்களைக் கொன்ற பெரும் பாபம் அவர்களைச் சேர்ந்ததால் பாண்டவர்களின் மனதில் நிம்மதி இல்லாமல் போனது. இந்தப் பெரும் பாபம் நீங்கி விமோசனம் பெற வேண்டி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை அணுகி வழிகாட்ட வேண்டினர். பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் அவர்களிடம் ஒரு கருப்புப் பசுவையும் கருப்புக் கொடியையும் அளித்தார். கருப்புக் கொடியைப் பிடித்தபடி கருப்புப் பசுவைப் பின் தொடர் வேண்டும் என்றும், எந்த ஒரு இடத்தில் கருப்புக் கொடியும், கருப்புப் பசுவும் வெண்ணிறமாக நிறம் மாறுகிறதோ அந்த இடத்தில் பாபவிமோசனம் பெறச் சிவபெருமானை நோக்கித் தவமியற்றி வேண்டும் என்றும் அறிவுரை கூறினார். பாண்டவர்கள் ஐவரும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் அறிவுரைப்படி கருப்புப் பசுவின் பின்னே கருப்புக் கொடியைப் பிடித்தவாறு பல ஆண்டுகளாகப் பாரத தேசத்தின் பல இடங்களிலும் நடந்து வந்தனர். தற்போதைய குஜராத் மாநிலத்தில் பவ்நகர் (Bhavnagar) மாவட்டத்தில் உள்ள கோலியாக் (Koliyak)நகரத்தின் கடற்கரைக்கு வந்தபோது கருப்புக் கொடியும், கருப்புப் பசுவும் வெள்ளையாக நிறம் மா...
அதிக உடல் பருமன் ( Obesity)
- Get link
- X
- Other Apps
அதிக உடல் பருமன் (Obesity) என்பது பொதுவாகவே பிறரின் கேலிப் பேச்சுகளால் மன உளைச்சலையும் அதே நேரம் உடல் ரீதியான பல பிரச்சனைகளையும் தரக் கூடியது. உடலின் எடை அதிகரித்தல் மட்டுமே அதிக உடல் பருமன் (Obesity) இல்லை. இது உடலில் கொழுப்பு சேகரமாவதால் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, கொலஸ்டிரால் மட்டுமல்லாமல் புற்றுநோய் தாக்கும் அபாயத்தைக் கூட அதிகரிக்கச் செய்யும் தீவிரமானதொரு மருத்துவ நிலை என்றும் சொல்லலாம். ருசித்து வயிறாரச் சாப்பிடக் கூட நேரமில்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு உழைத்துப் பணம் சம்பாதித்து, அப்படிச் சம்பாதித்ததுச் சேமித்த பணத்தை வாயைக்கட்டி வயிற்றைக் கட்டி சேர்த்த பணம் என்று சொல்வது வழக்கம். உண்மையில் வாயைத் கட்டி வாழ்ந்தால் நிச்சயமாகப் பிற்காலத்தில் வயிற்றைக் கட்டி வாழ வேண்டி இராது என்று கொழு உடல் மருத்துவ இயல் அல்லது உடல் பருமனியல் மருத்துவம் (Bariatric medicine) தெரிவிக்கிறது. உண்மையில் வாயைக் கட்டாமல் அதாவது கண்டவற்றையும் தேவையில்லாமல் உட்கொண்டால் பின்னாளில் வயிற்றை இறுக்கிப் பிடித்துக் கட்ட வேண்டி வரும். இரைப்பைப் பட்டை அறுவ...
அண்ணா நகர் அனுபவங்கள்
- Get link
- X
- Other Apps
அண்ணாநகர் இரண்டாவது நிழற் சாலை சென்னையின் மிக அழகான சாலைகளில் ஒன்று . சுமார் இருபத்தைந்து ஆண்டுகள் முன்பு இச்சாலையில் தபால் அலுவலகத்திற்கு எதிரில் இருந்த ஒரு வீட்டு வசதி வாரிய அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்தேன். குடியிருப்பில் மொத்தம் ஐந்து அடுக்குகள். ஒவ்வொரு அடுக்கிலும் மூன்று தளங்கள். ஒவ்வொரு தளத்திலும் எதிரெதிராக இரண்டு வீடுகள். நான் 1988 முதல் 1994 வரையில் முதல் தளத்தில் கதவு எண் 342/4 வசித்தது வந்தேன். இரு படுக்கை அறை அடுக்ககம். இரண்டு பத்துக்குப் பத்து படுக்கை அறைகள் அதே அளவில் ஒரு வரவேற்பறை, சிறிய ஆனால் வசதியான சமையலறை என்று காற்றும் வெளிச்சமும் எல்லா அறைகளிலும் போதிய அளவில் கிடைக்கக் கூடிய வகையில் நேர்த்தியான கட்டமைப்பை உடையது. கட்டுமானம் மிகத் தரமானது என்று சொல்ல இயலாத போதும் அடுக்ககத்தின் வளாகத்தில் முன்புறம் பாதுகாப்பாகக் குழந்தைகள் விளையாட நிறையத் திறந்த வெளி, சாலையை ஒட்டி இருப்பதும் கடைகள் வங்கிகள் என பல வசதிகள் இருநூறு மீட்டர் தொலைவில் சரவண பவன் நடைப்பயிற்சிக்கு விஸ்வேஸ்வரய்யா பூங்காவும் பக்திக்கு ஐயப்பன் கோவிலும் இருந்ததால் அந்த இட...
- Get link
- X
- Other Apps
நான் பணிபுரிந்த பள்ளியில் 2006 வாக்கில் நபார்ட் வங்கிக் கடன் மூலம் முப்பத்திரண்டு வகுப்பறைகளுடன் இரண்டு ஆய்வகங்கள் என்று கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் செலவில் கட்டடங்கள் கட்டப்பட்டன. எல்லா வகுப்புகளுக்கும் போதுமான அளவுக்கு மின்விசிறிகளும் (fans) குழல் விளக்குகளும் (tube lights) போடப்பட்டு இருக்கும். இந்த மின்விசிறிகளின் இறக்கைகளை தாமரைப் பூவைப் போல வளைப்பதும் குழல் விளக்குகளை உடைப்பதும் அவ்வப்போது நடக்கும். உடைக்கும் மாணவர்கள் யார்யாரெனக் கண்டுபிடித்தால் அரசியல் தலையீடுகள் வரும். அதனாலேயே ஆசிரியர்களும் தலைமை ஆசிரியரும் நமக்கேன் வம்பு என்ற எண்ணத்தில் கண்டும் காணாமல் இருந்து விடுவார்கள். சும்மா பேருக்கு இது போலப் பள்ளியில் சேதப்படுத்தும் செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காலையில் பிரார்த்தனைக் கூட்டத்தில் எச்சரிக்கை செய்வதும் எழுத்துப் பூர்வமாக எல்லா வகுப்புகளுக்கும் சுற்றறிக்கை விடுவதும் மட்டுமே இது சார்ந்து எடுக்கப்படும் கடும் நடவடிக்கையாக இருக்கும். 2000 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஏதாவது வகையில் பள்ளியில் மாணவர்கள் இடையில் அமைதியின்ம...
- Get link
- X
- Other Apps
அருள்மிகு சீனிவாசப்பெருமாள் திருக்கோயில், நாச்சியார்கோயில், கும்பகோணம் வட்டம், தகவல் பலகை : ஸ்ரீவாசுதேவன், பரிபூரணன், நம்பி, சீனிவாசன் வஞ்சுளவல்லி, நாச்சியார் ஸ்ரீப்ரத்யும்ணன், ஸ்ரீலங்கர்ஷ்ணன், ஸ்ரீ புருஷோத்தமன், ஸ்ரீ பிரும்மா, ஸ்ரீ அநிருத்தன் : ஸ்ரீசீனிவாசப்பெருமாள், ஸ்ரீ வஞ்சுளவல்லி தாயார் ஸ்ரீ பட்சிராஜன் (கவலைகள் நீக்கும் கல்கருட பகவான்) ஸ்ரீ ராமர் ஸ்ரீ சக்கரத்தாழ்வார். ஸ்ரீ யோக நரசிம்மன். ஸ்ரீ ஹனும். ஸ்ரீ வெங்கடாஜலபதி, ஸ்ரீ திருமங்கை ஆழ்வார். நம்மாழ்வார் மூலவர்கள் பெயர் தாயார் இதர மூலவர்கள் உற்சவர் பெயர்கள் வரப்பிரசாதி முக்கிய தீர்த்தம் * மணிமுக்தா தீர்த்தம் (திருக்குளம்) ஸ்தல விருட்சம் ஆகமம் மகிழ மரம் : வைகானச ஆகமம் - தென்கலை சம்பிரதாயம் திருக்கோயில் சிறப்பு திருமங்கை ஆழ்வாரால் 100 பாசுரங்கள் மங்கம் செய்யப்பட்ட திவ்யதேசங்களின் வரிசையில் 20ஆவது திவ்ய தேசமாகும். சோழநாட்டு மங்களாசாசனம் செய்யப்ப திருக்கோயில் வரிசையில் 14 ஆவது திவ்ய தேசமாகும். திருப்பதிக்கு இணையான பிரார்த்த ஸ்தலம் “தேன் கொண்ட சாரில் திருவேங்கடத்தானை நான் சென்று நாடி திருநறையூர் (நாச்சியார்கோயில்) கண்டே...
கண்ணோட்டம்
- Get link
- X
- Other Apps
கடந்த 2016 ஆம் ஆண்டில் எனக்குப் பார்வை சற்றே மங்கலாக இருப்பதாகத் தோன்றியது. சென்னையில் எழும்பூரில் உள்ள அரசு கண் மருத்துவமனை மிகவும் பழமையான பாரம்பரியம் மிக்க மருத்துவமனை. அடுத்து மிகப் புகழ் பெற்ற பெற்ற நுங்கம்பாக்கத்தில் உள்ள சங்கரநேத்ராலயா கண் மருத்துவமனை. இவை தவிர அகர்வால், வாசன் கண் மருத்துவமனைகளும் பல சிறிய தனியார் மருத்துவமனைகளும் உள்ளன. உடனே அருகிலுள்ள பிரபலமான சென்னையில் பல கிளைகளைக் கொண்ட தனியார் கண் மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொள்ளச் சென்றேன். அங்கு பரிசோதனைகள் செய்து உங்களுக்குக் கண்புரை அறுவைச் சிகிச்சை (Cataract operation) உடனே செய்ய வேண்டும். மருத்துவக் காப்பீடு ( Medical insurance) உள்ளதா? என்று கேட்டார்கள். அவர்கள் நிறுவனம் வழங்கும் மூன்று நான்கு வகையான புரை நீக்க அறுவைச் சிகிச்சைக்குரிய கட்டணத்தையும் கூறிய பின் எப்போது சிகிச்சையை வைத்துக் கொள்ளலாம்? என்றும் விரைவில் செய்து கொள்ளுங்கள், நீங்கள் சர்க்கரை நோயாளி என்பதால் பார்வையை இழக்கும் அபாயமும் உள்ளதென பயமுறுத்தினர். நான் எதற்கும் வேறொரு மருத்துவமனையில் இரண்டாவதாக கருத்துக் கேட...