அது நீ - விஷ்ணு வந்தார் நூலின் இரண்டாம் கதை
இந்தியாவின் டெல்லியில் வசிக்கும் நண்பனை அதாவது கதை சொல்லி ஃபிராங்கோவை பாலஸ்தீனத்தின் ஜெரிக்கோ (Jericho) நகரில் வசிக்கும் அரேபிய நண்பன் ஜியாங் முகமது அப்பாஸ் அழைக்கிறார். கதை சொல்லுபவர் ஒரு மரபணு விஞ்ஞானியாக இருக்க வேண்டும். அரேபிய நண்பன் அவரது கல்லூரித் தோழன். பாலஸ்தீனத்தில் வசிக்கும் பழங்குடி இன இடையர்களில் ஐம்பது சதவீதம் பேருக்குக் காணப்படும் ஒரு விசித்திரமான தழும்பு குறித்து மரபணு ரீதியில் ஆராய வேண்டித் தன் இந்திய நண்பனை அழைத்திருப்பதாகக் கதை தொடங்குகிறது. இந்திய நண்பன் இஸ்ரேலின் டெல்அவிவ்வில் இறங்கி பாலஸ்தீனத்தில் உள்ள ஜெரிக்கோ நகரை காரில் பயணித்து அடைகிறார். வழியில் அந்தப் பிராந்தியத்தின் அமைப்பை விவரிக்கிறார். ஒரு பக்கத்தில் பல செய்திகளை சொல்லி விடுகிறார். இஸ்ரேல், பாலஸ்தீனம், ஜோர்டான் ஆறு, பெரும் பிளவு பள்ளத்தாக்கு ( Great Rift Valley), கலிலி கடல் ( Gallile sea), சாக்கடல் (Dead sea), ஏசு கிறிஸ்து தொடர்புடைய நிகழ்வுகளை பட்டியல் இட்டு நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தி விடுகிறார். ஆனால் அந்தப் பகுதியின் ஒரு வரைபடம் தரப்பட்டிருந்தால் என்னைப் போன்ற...