Posts

தேனாண்டாள் - கதை (8) - லோகேஷ் ரகுராமன்

Image
இந்தக் கதை குறித்த என் பார்வையை பகிர்வது குறித்து நெடு நேரம் சிந்தித்துக் கொண்டிருந்தேன். காரணம் கதையில் வரும் பொன்னன் என்ற பாத்திரம் தன் கூட்டாளி தங்கராசுவிடம் கோபத்தில் சொல்லும் போது பயன்படுத்தப்பட்ட சில வாசகங்கள்.  படிப்பறிவு இல்லாத மலை வாழ் மக்களின் வாழ்வியலைச் சித்தரிக்கும் கதையில் எதார்த்தமாக வரும்  வசவுச் சொற்களை அருவருப்புடன் நோக்குவது நேர்மையான செயலாக இராது. மனதின் உள்ளே நீறுபூத்த நெருப்பாகக்  கனன்று கொண்டிருக்கும் அடங்காத கோபத்தை வெளிக்காட்டும் சொற்கள் அவை. ஆகவே இச் சொற்கள் கதை ஓட்டத்தில் வலிந்து திணிக்கப்பட்டவை இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டேன்.‌   மேலும் ஒரு எழுத்தாளர் எழுதிய கதைக்கு தடை போடவும் குறை சொல்லவும் அதற்குச் சம்பந்தமில்லாத நான் யார்? நான் பகிர வேண்டாம் என்று முடிவெடுத்தாலும் வேறு இணைய மின்னிதழ்களில் அதனை படிக்கும் வாய்ப்பும் உரிமையும் வாசகர்களுக்கு நிச்சயமாக உண்டு. அதனால் பகிர முடிவு செய்தேன்.‌ என் முடிவை நீங்கள்  ஆதரிப்பீர்கள் என்று நம்புகிறேன். இப்போது கதையின் இணைப்புக் கண்ணியைக் கீழே தந்துள்ளேன். வழக்கம் போல் கதையை முழுவதுமாகப...

நவம் - கதை (7) - லோகேஷ் ரகுராமன்

Image
விஷ்ணு வந்தார் நூலை வாங்கியது குறித்து முகநூலில் பதிவொன்றைச் சில நாட்களுக்கு முன் இட்டிருந்தேன். அப்பதிவில் என் முன்னாள் மாணவி அம்மு குட்டி மோன் மறுமொழி இட்டிருந்தார்.‌ அதில் அவர் "நவம்" கதை திருவண்ணாமலை பற்றிய கதை எனவும் அது குறித்த என் கட்டுரையைப் பாருங்கள் என்றுபடிக்க ஆர்வமாக உள்ளதாகத் தெரிவித்திருந்தார். அவருக்கும் மற்ற வாசகர்களுக்கும் ஒரு வேண்டுகோள். முதலில் "நவம்" கதையை முழுமையாகப் படிக்கவும்.  கதைக்கான இணைப்புக் கண்ணி கீழே தந்துள்ளேன்.  https://lokeshraghuraman.wordpress.com/2020/04/16/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/ இப்போது கதையை முழுவதும் படித்து முடித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். இனி என் பார்வையில் நவம் கதை.  கதை நடக்கும் களம் திருவண்ணாமலை. ஆனால் கதையில் திருவண்ணாமலை நகரத்தையோ அல்லது கோவிலையோ குறித்த செய்திகள் இல்லை என்பதே உண்மை. 'நவம்' என்றால் எண் ஒன்பது. கதையில் மூன்றுக்கு மூன்று மாயச் சதுரம் அதாவது ஒன்பது கட்டங்கள் மற்றும் ஒன்பது எண்ணின் சிறப்புகளை அறிந்து கொள்ள நல்ல வாய்ப்புக் கிடைக்கிறது. கதையில் இரண்டே இரண்டு பாத்திரங்கள்தான். இளிச்சவ...

எங்கட நினைவில் கடல் இல்லை - லோகேஷ் ரகுராமன்

Image
  நேற்று முகநூலில் எழுத்தாளர் திரு.‌லோகேஷ் ரகுராமன் அவர்களின் பக்கத்தை மேய்ந்து கொண்டிருந்தேன்.‌ அதில் "அந்தி மழை" மின்னிதழில் வெளியான கதையான     "எங்கட நினைவில் கடல் இல்லை" கதைக்கான இணைப்பைக் கொடுத்திருந்தார். கதைக்கான இணைப்புக் கண்ணி இதோ கீழே தரப்படுகிறது.‌ முதலில் கதையை முழுவதுமாகப்‌ படித்த பின்‌ என்‌ பார்வையைப் படித்தல் நலம். https://www.andhimazhai.com/literature/short-stories/engada-ninaippil-kadal-illai கதையில் பெங்களூரில் மென் பொருள் பொறியாளராக பணிபுரியும் ஒருவர் 200 கிமீ தூரம் தனது புல்லட் மோட்டார் சைக்கிளில் பயணித்து பலமனேரு குடியாத்தம் அருகே உள்ள கிழக்குத் தொடர்ச்சி மலையில் உள்ள அருவியில்  குளிக்கவும்  ஓய்வெடுக்கவும் (அதாவது யாருடைய இடைஞ்சலுமின்றி மது அருந்த)  வருகிறார். அப்போது அவரைப் போல மது அருந்த ஒரு லாரி ஓட்டுனர் ஒருவரும் அங்கே வருகிறார். இருவரும் நண்பர்களாக ஆகி ஒன்றாக மது அருந்துகின்றனர்.‌ முதலில் லாரி ஓட்டுனர் தன்னைத் திருப்பத்தூரைச் சேர்ந்தவர் என்று அறிமுகப்படுத்திக் கொள்கிறார். இரண்டு சுற்று மது உள்ளே சென்றதும் அவரது பேச்சு மொழி வேற...

அன்னம் - கதை (6) - லோகேஷ்‌ ரகுராமன்

Image
வழக்கம் போல கதையின் wordpress  இணைப்புக் கண்ணியைக் கீழே தந்துள்ளேன். கதையை முழுவதும் படித்து விட்டு அதன்பின் என் பார்வையில் கதையை குறித்து எழுதியுள்ளதைப் படிக்கவும். https://wp.me/p14lnH-rT இந்த அன்னம் மிகச் சிறிய கதை.‌ இதுவரை  நான் படித்த லோகேஷ் ரகுராமனின் கதைகளில் இதுதான் அதிக ஆழமில்லாத கதைக் களத்தைக் கொண்டது என்று சொல்வேன். நடுத்தர வர்க்கத்தின் கதை என்று சொல்ல முடியும்.‌  கதையில் முதியவர் ஒருவர் வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள மளிகைக் கடையில் அரிசி வாங்குகிறார்.‌ அரிசியைக் கொஞ்சம் கொஞ்சமாக தேவைக்கேற்ப வாங்கலாம் என்ற‌ மனைவியின் பேச்சைக் கேட்காமல் ஒரேயடியாகப் பத்து கிலோ அரிசியை வாங்கி விடுகிறார். வாங்கிய அரிசி மூட்டை பிரிக்கப்படாமலேயே மூன்று தினங்கள் ஒடி விடுகிறது.‌ முதியவரின் மகன் பிரித்து வேறு பாத்திரத்திற்கு மாற்றிய போது அரிசியில் பழவாடை அடிப்பதும் சாக்கு மூட்டை ஈரித்திருப்பதும் தெரிகிறது. மகன் அரிசிப் புழுக்கூடுகளைக் கண்டதும் கடைக்கு‌ மாற்றித் தருவதற்காக எடுத்துச் செல்கிறார் கடைக்காரர் மற்றும் அவரது மனைவி இருவரும் சற்றுக் கறாரானவர்கள். அவர்கள் இருவரும் கெட்டுப்போன அரிசி...

கடல் கசந்தது - கதை (5) - லோகேஷ் ரகுராமன்

Image
 முதலில் கதையைப் படித்த பின்னர் என் பார்வையைப் படிப்பதே சிறப்பு.‌ இதுவரை கதைக்கான தமிழினி மின்னிதழின் இணைப்புக் கண்ணியைக் கீழே  பகிர்ந்துள்ளேன்.  https://tamizhini.in/2021/06/24/%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4%e0%af%81/ லோகேஷ் ரகுராமனின் சிறுகதைத் தொகுப்பான " விஷ்ணு வந்தார்" புத்தகத்தில் மேற்கண்ட ' கடல் கசந்தது' கதை 5 வது சிறுகதையாக இடம்பெற்றுள்ளது. இக் கதைக்காகவே அவருக்கு சாகித்திய அகாதமியின் 2024 ஆம் ஆண்டுக்கான யுவபுரஸ்கார் விருது வழங்கப்பட்டுள்ளது. மகன் இறந்த 14 வது நாளன்று அலுவலகம்  சென்று கதாநாயகன் காறி உமிழுவதற்காக கடலில் இறங்குவதைக் கதை சொல்கிறது. கடல் மீது ஏன் அப்படி ஒரு வெறுப்பு? "ஓயாமல் கரை மேல் காறித் துப்பும் கடலுக்கு என்ன என்னைப் போல் இரைப்பையில் பித்தநீர் பிரச்சினையா"? என்று தந்தையிடம் வினா எழுப்பும் சாவின் விளிம்பில் நிற்கும் ஏழு வயது மகனின் பரிதாப வாழ்க்கையைப் பற்றி கதை இது.   இரைப்பையில் அதிக அளவில் பித்தநீர் சுரக்கும் கொடிய நோயால் பிறந்ததிலிருந்து பாதிக்கப்பட்ட குழந்தையுடன் சென்னை...

நீர் பதுமராகம் - கதை (4) - லோகேஷ் ரகுராமன்

Image
 என்னுடைய பள்ளி வாழ்க்கை திருநெல்வேலி டயோசிசன் டிரஸ்ட்  அசோசியேஷன் (TDTA) நடத்தி வரும் பள்ளி ஒன்றில் தொடங்கியது. திருநெல்வேலி டவுண் பகுதியில் இருந்த அந்தப் பள்ளியின் பின்புறம் ஒரு வாய்க்கால் ஓடும்.‌ வாய்க்காலில் மிதந்து வரும் ஆகாயத்தாமரை செடிகளை எடுத்து வந்து கரும்பலகை (BLACK  BOARD) மற்றும் எங்களின் ஸ்லேட் (SLATE)முதலியவற்றைத் துடைப்போம்.‌ அப்படிச் சிறுவனாக இருக்கும் போதே எனக்கு அறிமுகமானதுதான்  நீர் பதுமராகம் என்ற நமக்கு நன்கு பரிச்சயமான ஆகாயத் தாமரை ( Water Hyacinth). இவற்றின் மலர்கள் ் வெளிர்  ஊதா, லாவெண்டர் மற்றும் இளம் சிவப்பு நிறங்களில் காணப்படுகின்றன. கிரேக்க தொன்மக் கதையில் இந்த நீர்த் தாவரம் உருவான செய்தி வருகிறது.  படம் - நீர் பதுமராகம்  தொன்மக் கதையைப்  படிக்க ஆரம்பித்ததும் ஆகா, இது ஒரு மாதிரியான கே (GAY) களமாக இருக்கும் போலிருக்கிறதே என்று நினைத்தேன். ஆனால் நல்ல வேளையாக கதை அந்தத் திசையில் பயணிக்கவில்லை.  ஹயாசிந்த் மலரின் கதை கிரேக்க தொன்மத்தில் ஆரம்பமாகிறது.‌ அந்த கிரேக்க தொன்மக் கதையில்  சூரியக் கடவுளான அப்பல்லோ (APOLLO) இ...

பாஞ்சஜன்யம் - கதை 3 - லோகேஷ் ரகுராமன்

Image
 லோகேஷ் ரகுராமனின் விஷ்ணு வந்தார் புத்தகத்தில் மூன்றாவது கதையாக வருகிறது. இது அரூ மின்னிதழில் பிரசுரமான சிறுகதை. இச் சிறுகதை குறித்த என் பார்வை முதலில் கதையை‌ படித்து விட்டு பின்னர் என்னுடைய கதை குறித்த கருத்தைப் படித்தால் நல்லது. கதை அரூ மின்னிதழில் பிரசுரமான ஒரு கதை.‌ முடியும் பட்சத்தில் அதன் இணைப்புக் கண்ணியை இறுதியில் பதிவிடுகிறேன். லோகேஷ் ரகுராமனின் கதைகளில் ஒவ்வொரு சிறுகதையும் வேறு வேறு களங்களில் நடக்கின்றன. இச் சிறுகதை சென்னையில் நடக்கிறது. காது கேட்காத, மனைவியை இழந்த தந்தையைத் தன் வீட்டில் வைத்துப் பராமரிக்கும் மகள். ஆஸ்திரேலியாவில்  பயோ அக்கஸ்டிக்ஸில் (BIO ACOUSTICS) தாவரங்களின் ஒலி உணர்தல் குறித்து ஆராய்ச்சி செய்யும் மகன். காது கேட்காததால் நிகழ்ந்த  இரு சக்கர வாகன விபத்தில் மனைவியைப் பற்றி கொடுத்த தந்தை, மனைவியைத் தான் கொன்று விட்டதாகக் கருதி மனமுடைந்து போகிறார்.  தன் காதுக்குள் இறந்து போகும் முன் மனைவி எழுப்பிய அலறல் ஒலி கேட்பதாகச் சொல்லி வருந்துகிறார். மனைவி உயிரோடு இருக்கும் காலத்தில் அவள் ஆசையாகப் பராமரித்த தோட்டத்தைக் குறித்து எந்த அக்கறையுமின்றி இருந்...

பொது இடங்களில் இம்சைகள்

Image
 பொது இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை ஒரு பாடமாக பள்ளிகளில் வைத்து விடலாம்.‌ காரணம் நம்மாட்கள் செய்யும் அட்ராசிட்டி. என் கண்ணில் பட்ட சில நிகழ்வுகளில் நம் மக்கள் எவ்வளவு சுயநலமாக அடுத்தவரைக் குறித்துக் கவலையே படாமல் இருக்கிறார்கள் என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். ஒரு‌வகையில்‌ வட இந்தியர்களை‌ விட நாம்‌ பரவாயில்லை.‌ வட இந்தியாவில் சுயநலமிக்க மக்கள் அதிகம் என்பது‌ என் கருத்து. பிக் பாக்ஸர்கள் (BIG BOXERS) அதாவது பெரிய பெட்டிக்காரர்கள். முதலாவதாக ரயில் பயணங்களில் லக்கேஜ் எடுத்துவரும் பயணிகள் குறைந்தபட்சமாக இரண்டு சூட்கேஸ்களாவது எடுத்து வருகிறார்கள். டறள திரும்பும் பயணிகள் பெரிய ஜம்போ சைஸ் சூட்கேஸ்கள்  நாலைந்து எடுத்து வருவார்கள்.‌ அந்த சூட்கேஸ்களில் சராசரியாக அறுபது கிலோ நிறையுள்ள ஒருவரை நாலாக மடித்து உள்ளே வைத்து விடலாம்.‌ அத்தனை பெரிசாக இருக்கும்.‌ இவர்கள் எல்லாம் ரயில் வந்து நின்றதும் முண்டியடித்துக் கொண்டு லக்கேஜுடன் ஏறி லக்கேஜ் வைக்கும் இடத்தை நிரப்பி விடுவார்கள்.‌ ( அடுத்தவரை ஏறவே விட மாட்டார்கள்). சரி இவர்களுக்கு வழி விட்டு பின்னர் ஏறும் என் போன்ற புஜபல ...