Posts

Showing posts from March, 2021

இதயம் திறந்த அனுபவங்கள் - பகுதி (4)

Image
அறுவை சிகிச்சைக்குப் பிறகு நோயாளி மீட்பு அறைக்கு (recovery room) மாற்றப்படுவார். ஒரு அறுவை சிகிச்சைக்கோ அல்லது செயல்முறைக்கோ மயக்க மருந்து (anesthesia) செலுத்தப்பட்டதால்  நோயாளி உணர்வற்ற நிலையில் இருப்பார். உணர்விழந்த நிலையிலிருந்து விழித்தெழுவதற்காக, நோயாளி மயக்கநிலைக்குப் பின்னரான பராமரிப்பு பிரிவுக்கு (Post Anesthesia Care Unit - PACU ) மாற்றப்படுவார். சில மருத்துவமனைகளில் இப்பிரிவு இல்லாமலும் இருக்கலாம். கண்காணிப்பு உபகரணங்கள் மற்றும் சிறப்புப் பயிற்சி பெற்ற ஊழியர்களைக் கொண்ட இப்பகுதி பெரும்பாலும் மருத்துவமனையின் அறுவைச்சிகிச்சை அரங்கங்களுக்கு (operation theatres) அருகிலேயே அமைந்திருக்கும் . Picture courtesy: https://www.venturemedical.com/blog/choosing-patient-monitor/ இந்தக் கண்காணிப்புக் கருவியில் இதய மின் வரைவி (ECG) இதயத் துடிப்பு வீதம் (Heart rate), இரத்த அழுத்தம் (NIBP) , மற்றும் தெவிட்டிய ஆக்ஸிஜன் நிலை (SpO2) போன்றவை கண்காணிக்கப் படுகின்றன. சில மருத்துவமனைகளில், இது பல நோயாளிகள் பகிர்ந்து கொள்ளும் இடமாகவோ (Dormitory) அல்லது ஒரு தனி நபர் பயன்படுத்தும் அறையாகவோ (Single privat

இதயம் திறந்த அனுபவங்கள் - பகுதி (3)

Image
அடுத்தது அறுவைச் சிகிச்சை அறைக்கு (Operation theatre)  வந்த பிறகு என்ன நடக்கும் என்று காணலாம். சிஏபிஜி (CABG) அறுவைச் சிகிச்சையைப் பொறுத்தளவில் நடைமுறைகள் (procedures) பெரும்பாலான  மருத்துவமனைகளில் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருந்தாலும் சிற்சில வேறுபாடுகளும் இருக்கலாம். (1) மருத்துவமனைகளில் அறுவைச் சிகிச்சைப் பிரிவில் பல அறுவைச் சிகிச்சை நிபுணர்களுடனும் (Surgeons) இணைந்து செயல்பட மருத்துவர்கள் (Doctors), செவிலியர்கள் (Nurses) மற்றும் மருத்துவக் கருவிகளைக் கையாளும் தொழில் நுட்பப் பணியாளர்கள் (Technical staff) அடங்கிய அனுபவம் வாய்ந்த பணியாளர் குழுக்கள் (Operation theatre crews) அறுவைச் சிகிச்சைக்கூடப் பணிகளுக்காகத் தனியே  இருக்கும்.  (2) நோயாளியை அவரது அறைப்பிரிவில் பணியில் இருக்கும் செவிலியர் (ward duty nurse) அறுவைச் சிகிச்சைக் கூடத்திற்கு இட்டுச் செல்லும் போது கூடவே நோயாளி குறித்த அனைத்து விவரங்களும் அடங்கிய மருத்துவக் கோப்புடன் (file) வருவார். அறுவைச்சிகிச்சைக் கூடத்தில் (operation theatre) பணியில் உள்ள செவிலியரிடம் நோயாளியை அவரது மருத்துவக் கோப்புடன் முறையாக ஒப்படைத்து விட்டு மீண்டும் த

இதயம் திறந்த அனுபவங்கள் - பகுதி (2)

Image
  அறுவைச் சிகிச்சைக்குத் தயாராதல் நோயாளிக்கு சி.ஏ.பி.ஜி (CABG) அறுவைச்சிகிச்சை ஏன் செய்யப்பட வேண்டும் என்பதற்கான காரணங்களை மருத்துவர் முதலில் கூறுவார். அதன் பின்னர் செயல்முறை (procedure) குறித்து விளக்கி அதில் சாத்தியமான  அபாயங்களைப் பற்றியும் எடுத்துரைப்பார் . அப்போது நோயாளி தன் மனதில் தோன்றும் அனைத்து ஐயங்களையும் அச்சங்களையும் மருத்துவரிடம் தெரிவித்து அவற்றுக்கான தக்க விளக்கங்களைப் பெற்றுத் தெளிவு பெறலாம்.  நோயாளி அறுவைச்சிகிச்சைக்கு வாய்மொழி ஒப்புதல் கொடுத்த பின்னர் அறுவைச் சிகிச்சைக்கு முன்னதாக மேற் கொள்ள வேண்டிய சோதனைகளுக்கான எழுத்துப் பூர்வமான அனுமதி அளிக்கும் படிவங்களில்  நோயாளியின் கையொப்பம் பெறப்படும். கையொப்பம் இடுமுன் படிவத்தைக் கவனமாகப் படித்தும் தெளிவு பெற இயலாத பட்சத்தில் மருத்துவரிடம் வினாக்களை எழுப்பித் தெளிவு பெறலாம்.  நோயாளியின் மருத்துவ  வரலாற்றை (medical history) மருத்துவர் குழு முழுமையாக மதிப்பாய்வு செய்தும் முழு உடற்பரிசோதனைகளுக்கு உட்படுத்தியும் அறுவைச் சிகிச்சையை மேற்கொள்ளும் உடற்தகுதி இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்வார். இது தவிர வேறு சில இரத்தப் பரிசோதனைகள
  லாபரோஸ்கோபிக் சரிசெய்யக்கூடிய இரைப்பை கட்டுப்படுத்துதல் லேபராஸ்கோபிக் சரிசெய்யக்கூடிய இரைப்பைப் பட்டை (Laproscopic Adjustable Gastric Band - LAGB) அறுவை சிகிச்சை மிகக் குறைவான ஊடுருவும்(Minimally invasive) எடை இழப்பு அறுவை சிகிச்சை ஆகும். எல்ஏஜிபி அறுவை சிகிச்சையின் போது, ​​உங்கள் வயிற்றின் மேல் பகுதியை சுற்றி ஒரு கட்டுப்பாட்டுப் பட்டை வைக்கப்பட்டு, உங்கள் கீழ் வயிற்றுக்கு ஒரு குறுகிய திறப்புடன் ஒரு சிறிய பையை (Pouch) உருவாக்குகிறது. பட்டையுடன் இணைக்கப்பட்ட அணுகல் துறை (Access Port) உங்கள் தோலின் கீழ் ஆழமாக வைக்கப்பட்டுள்ளது. பட்டை உங்கள் மேல் பையில் நீண்ட காலத்திற்கு உணவைத் தக்க வைத்துக் கொள்ள அனுமதிக்கிறது, இதனால் நீங்கள் விரைவாக முழுமையாக உணர முடியும். பின்னர், உணவு உங்கள் கீழ் வயிற்றுக்குச் சென்று செரிமானம் சாதாரணமாக நிகழ்கிறது. உணவு உறிஞ்சப்படும் விதத்தில் எந்த மாற்றமும் இல்லை. இருப்பினும், நீங்கள் குறைந்த உணவையே சாப்பிடுவதால் நீங்கள் வைட்டமின் மற்றும் தாதுப்பொருட்களை எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் பசி மற்றும் அறிகுறிகளின் அடிப்படையில் உங்கள் பட்டையைச் சரிசெய்ய வேண்டும். அணுகல்

இதயம் திறந்த அனுபவங்கள் - பகுதி (1)

Image
சில மாதங்களுக்கு முன் சென்னையில் உள்ள பிரபலமான தனியார் மருத்துவமனையில் எனக்கு இதயத் தமனி அடைப்புக்காகச் செய்யப்படும் பக்க அல்லது புறவழி வழி ஒட்டு அறுவைச் சிகிச்சை (Coronary Artery Bypass Grafting - CABG) செய்யப்பட்டது. அறுவைச் சிகிச்சை என்றாலே பெரும்பாலானவர்களின் மனதில் இரு பெரும் அச்சங்கள் ஏற்படுகின்றன. முதலில் திறந்த இதய அறுவைச் சிகிச்சைக்குக் குறைந்தது மூன்றிலிருந்து நான்கு லட்சங்கள் வரை செலவு செய்ய வேண்டுமே என்பதும் அடுத்தது  அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்து உயிர் பிழைத்து வருவோமா என்பதும். இவ்விரு அச்சங்களுமே இதய நோயாளிகளில் பலரைச்  சரியான நேரத்தில் தக்க சிகிச்சையை எடுத்துக் கொள்வதைத் தள்ளிப் போடச் செய்கின்றன. உண்மையில் அறுவைச் சிகிச்சை குறித்த மேற் சொன்ன இரண்டு அச்சங்களுமே பொருளற்ற தேவையற்ற அச்சங்களே.  இந்தத் தொடர் கட்டுரைகள் சற்று நீண்டதாக இருந்த போதிலும் முழுவதும் படிப்பவர்களுக்கு திறந்த இதய அறுவைச் சிகிச்சை (Open heart surgery) குறித்த  புரிதலையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் என நம்புகிறேன்.  தற்போதய சூழலில் மருத்துவம் என்பது எப்படி நாள்தோறும் நவீனமாகி வருகிறதோ

காப்பீட்டுத் திட்டங்களின் வகைகள் - ஒரு சிறு விளக்கம்

Image
காப்பீட்டுத் திட்டங்கள் (Insurance plans) குறித்து மக்களிடையே போதிய  விழிப்புணர்வு இல்லை. இன்னும் பொதுமக்களில் பலருக்கும் ஆயுள் காப்பீடு (Life Insurance), விபத்துக் காப்பீடு (Accidental Insurance) மற்றும் ஆரோக்கியக் காப்பீடு ( Health Insurance)  ஆகியவற்றுக்கிடையில் உள்ள வேறுபாடுகளைக் குறித்த சரியான புரிதல் இல்லை. சில மாதங்களுக்கு முன் சென்னையில் ஒரு பிரபல மருத்துவமனையின் சேர்க்கைப் பிரிவில் (admission section) எனக்கு முன் ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி நின்றிருந்தார். அவர் அங்கிருந்த பணியாளருடன் ஆங்கிலத்தில் சரளமாக உரையாடியதிலிருந்து அவர் படித்த பெண்மணி என்று ஊகித்துக் கொண்டேன். அவர் தன்னுடைய  கணவரை இதய அறுவைச் சிகிச்சைக்காக உள் நோயாளியாக சேர்க்கை பெற வேண்டி அங்கு வந்திருப்பதையும் அவருக்கும் மருத்துவமனை ஊழியருக்கும் இடையில் நடந்த உரையாடல்கள் வாயிலாக அறிய முடிந்தது.  மருத்துவமனை ஊழியர் அவரிடம் சேர்க்கைக்காக இருபதாயிரம் ரூபாய் முன்பணமாக செலுத்தும்படி கூறினார். அதற்கு அந்தப் பெண்மணி தன்னிடம் நாற்பது இலட்ச ரூபாய்க்குக் காப்பீடு (Insurance) உள்ளது ஆகவே முன்பணம் செலுத்தாமல் அனுமதிக்க வேண்டும் என