Posts

Showing posts from June, 2019

கண்டதும் களித்ததும் - பகுதி 11 ( புனே பயணக் கட்டுரைகள்)

Image
பல்லால்லேஷ்வர்   என்றால் பல்லாலின் கடவுள் (Ballal's Lord) என்று பொருள். எட்டு அஷ்டவினாயகர் திருத்தலங்களில் இத்தலத்தில் மட்டும்தான் வினாயகரின் அவதாரம் பக்தனின் பெயரால்   வழங்கப்படுகிறது. வினாயகர், அந்தணரைப் போன்ற உடையலங்காரத்தில் காட்சியளிப்பதும் இங்கு மட்டுமே.   இத்திருத்தலம் ராஜ்காட்(Raigad) மாவட்டத்தில் கர்ஜாட்(Karjat)லிருந்து ஐம்பத்தெட்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பலி(Pali) என்னும் கிராமத்தில் சரஸ்காட்(Sarasgad fort) கோட்டைக்கும், அம்பா(Amba) நதிக்கும் நடுவில் அமைந்துள்ளது. ஆலயத்தை 1640 ஆம் ஆண்டில் மோரேஷ்வர் விட்டல் சிந்த்கர் கட்டினார். இவர் சத்ரபதி சிவாஜியின் ஸ்வராஜ்யம் அமைக்கும் செயல்களில் நிறையப் பங்கு எடுத்துக் கொண்டவர். ஸ்ரீ கணபதியின் பக்தரான இவர் ஆலயத்தின் வளர்ச்சிக்கு அதிக அளவில்   நிதி கொடுத்துள்ளார்.  மரத்தாலான மூல ஆலயம் 1760 ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது காணப்படும் ஆலயம் மொரோதாபாத்தைச் (Moradabad) சேர்ந்த ஸ்ரீ ஃபட்னிஸ் (Shri Fadnis) என்பவரால் வடிவமைக்கப்பட்டு கல்லால் ஆன ஆலயமாக மாற்றப்பட்டுள்ளது. சிமிண்டும் ஈயமும் கலந்து செய்யப்பட்ட கல

கண்டதும் களித்ததும் பகுதி - 10 (புனே பயணக் கட்டுரைகள்)

Image
அஷ்ட வினாயகர் ஆலயங்கள்   ஸ்ரீவரத்வினாயகர் ஆலயம் , மஹத்(Mahad) லென்யாத்ரி கிரிஜாத்மஜர் ஆலயத்திலிருந்து புறப்படும் போது காலை மணி ஒன்பதரையாகியிருந்தது . முந்தைய நாள் நள்ளிரவு வரை விழித்திருந்தது , முன்னூற்றைம்பது படிகள் மலையேறிய அசதி மற்றும் பசியில் அனைவரும் சோர்வாக உணர்ந்தோம் . லென்யாத்ரியிலிருந்து புறப்பட்ட பேருந்து நுழைந்ததும் பக்கத்தில் உள்ள உணவு விடுதிக்குள் அனைவரும் காலை உணவுக்காகச் சுற்றுலா அமைப்பாளர் வழங்கிய சீட்டுடன் வரிசையில் நிற்கவும் உணவு வழங்கப்பட்டது . இங்கும் போகோ உப்புமா , மிஷால் பாவ் மற்றும் சூடான காபி அல்லது தேனீர் வழங்கப்பட்டது . சாப்பிட்ட அனைத்துமே சுவையாக இருந்தன . ஓரளவுக்கு நீண்ட பயணத்தின் சலிப்பு சற்றுக் குறைந்தது . அடுத்து ஏழாவதாக எங்களை இட்டுச் சென்ற இடம் மஹத் (Mahad) ஸ்ரீவரத்வினாயகர் (Varadvinayagar) ஆலயம் காலாப்பூர் (Khalapur) தாலுக்காவில் .  ராய்காட் (Raigad) மாவட்டத் தைச் சேர்ந்த கர்ஜத் (Karjat) க்கும் கோபொலி (Khopoli) க்கும் அருகில் மஹத் (Mahad) கிராமம் அமைந்துள்ளது . இவ்வாலயத்தை 1725 ஆம் ஆண்டில் பேஷ்வா ஜென்ரல் ராம்ஜி மகாதேவ்

காச நோய்க் கிருமியை அழிக்க ஒரு வருடத்திற்கு 200 கோடி தேவை

Image
ஆண்டு   தோறும்   இரண்டு   பில்லியன்  ( இருநூறு   கோடி )  டாலர்   முதலீடு   செய்ய   உலகநாடுகள்   முன்வந்தால்  வரும் 2045 ஆம் ஆண்டுக்குள் காச நோயை (Tuberculosis) முற்றிலுமாக ஒழித்துவிட  இயலும் .   வேறெந்த ஒரு தொற்று நோயைக் காட்டிலும் அதிகமானோர் இறப்பதற்குக் காரணமாக அமைவது காச நோயே . ஆண்டுதோறும் காச நோயால் உலகில் சுமார் 1.6 இலட்சம் மக்கள் பலியாகின்றனர் என்பது மிகவும் வேதனையான கவலை தரும் செய்தி . இருப்பினும் எதிர்உயிரி மருந்துகளால் காசநோயைக் குணப்படுத்த முடியும் என்பதும் தேவையான அளவு முயற்சி எடுக்கும் பட்சத்தில் நோய் பரவுதலைக் கட்டுக்குள் வைத்து மேற்கொண்டு சமுதாயத்தில் பாதிப்பை ஏற்படுத்தாமல் தடுக்கவும் முடியும் என்பது சற்றே ஆறுதல் தருகிறது . பயனுள்ள சிகிச்சை முறைகள் மற்றும் நோய்த்தடுப்புச் செயல் திட்டங்களின் வாயிலாக இன்னும் முப்பதே ஆண்டுகளில் காசநோயை முற்றிலுமாக அழிக்க முடியும்  என்று   ஹவாய்  பல்கலை க்   கழகத்தின்   சமீபத்திய   ஆய்வறிக்கை   ஒன்று   தெரிவிக்கிறது . படம்: காச நோய்க் கிருமி   இத்