Posts

Showing posts from July, 2020

இந்திய வானியலாளர் - C. ரகூநாதச் சாரி

Image
இதுதான் நம் நாட்டின் வரலாறு என்று பள்ளி, கல்லூரிப் பாடங்கள் வழியாக நமக்கு அறிமுகப் படுத்தப்பட்ட வரலாறு நம்மிடையில் வாழ்ந்த இந்திய அறிஞர்களை அதிகம் வெளிச்சமிட்டுக் காட்டவில்லை. மாறாக இந்தியாவிற்கு எந்த வகையிலும் பெருமை சேர்க்காத யார்யாரையோ குறித்த பயனற்ற தகவல்களையே இதுகாறும் அரசுகள் வலிந்து திணித்து வந்துள்ளன என்பது என்னுடைய எண்ணம். என்னுடைய இந்தக் கருத்துடன் நீங்கள் மாறுபடலாம். சரி அதற்கான முழுச் சுதந்திரமும் உங்களுக்கு இருக்கிறது. இப்போது உங்களுக்கு ஒரு வினா. நம் நாட்டின் தன்னாட்சி பெற்ற முதல் வானியல் ஆய்வகம் (Observatory) எங்கு யாரால் ஏற்படுத்தப்பட்டது தெரியுமா? நிச்சயம் உங்களில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆக இந்தக் கட்டுரையின் அடிப்படை நோக்கமே சென்னயில் செயல்பட்ட இந்தியாவின் முதல் நவீன வானியல் ஆய்வுக்கூடம் குறித்த சில தகவல்களைப் பகிர்ந்து கொள்வதும்  கூடவே   நாம் அறிந்திராத  அதிகம் பேசப்படாத இந்திய வானியல் அறிஞர் ஓருவரை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதும்  தான்.  கி.பி.  9 மற்றும் 12 ஆம் நூற்றாண்டில் தென்னிந்தியாவின் கேரளத்தில் பெருமாள் வம்சம் அல்லது மஹோதயபுரத்தின் சேரமான் பெ
பால்வழி விண்மீன் திரளில் (Milky way Galaxy) நான்கு சுழல் கரங்கள் உள்ளன. இவற்றில்  இரண்டு முக்கியமான பெரிய கரங்களான (Major arms) ஸ்கட்டம் – சென்டாரஸ் (Scutum – Centaurus) மற்றும் பெர்சியஸ் (Perseus). இவை ஒரு தடிமனான மையப் பட்டியின் (Central bar) முனைகளில் இணைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். அவற்றுக்குக் கீழே இறக்கப்பட்ட நிலையில் இரண்டு சிறிய கரங்களான (Minor arms)  நார்மா (Norma) மற்றும் சஜிட்டேரியஸ் (Sagittarius) குறைந்த தெளிவுடன் முக்கியக் கரங்களுக்கு இடையில் அமைந்துள்ளன. முக்கியக் கரங்களில் இளம் மற்றும் வயதான விண்மீன்கள் செறிந்து அடர்த்தியாக உள்ளன. சிறிய கரங்கள் அடிப்படையில் வாயுவாலும் மற்றும் புதிய விண்மீன்களை உருவாக்கும் சிறு சிறு பகுதிகளாலும் நிரப்பப்பட்டுள்ளன. நமது சூரியன் நார்மா (Norma) மற்றும் சஜிட்டேரியஸ் (Sagittarius) சிறு கரங்களுக்கு இடையில் உள்ள ஓரியன் ஸ்பர் (Orion Spur) அல்லது ஓரியன் கரம் (Orion arm) என்று பெயரிடப்பட்டுள்ள மற்றொரு சிறிய கையில்  அமைந்துள்ளது.  நமது பால் வழி விண்மீன் திரள், சுமார் 13 பில்லியன் அதாவது 1300 கோடி ஆண்டுகள் பழமையான சில பில்லியன் (Billion) விண்மீன்களைத

நார்மன் ராபர்ட் போக்சன்

Image
நேற்று விண்மீன்களின் பொலிவு குறித்த ஒரு காணொலி தயாரித்துக் கொண்டிருந்தேன். அப்போது விண்மீன்களின் தோற்றப் பொலிவெண் (Apparent magnitude) குறித்த தற்போது நடை முறையில் பயன்படுத்தப்படும் எண் மதிப்பு அளவீட்டு முறையை (magnitude scale) உருவாக்கிய  நார்மன் ராபர்ட் போக்சன் (Norman Robert Pogson) சென்னையில் வாழ்ந்து மறைந்த ஆங்கிலேயர் என்ற விபரம் அவரைப் பற்றி இன்னும் அதிகமான விவரங்களை அறிந்து கொள்ள என்னைத் தூண்டியது. அதனால் இணையத்தளத்தில் அவர் குறித்துத் தேடிய போது ஆங்கிலத்தில் கிடைத்த தகவல்களைத் திரட்டித் தமிழில் தருகிறேன்.  நார்மன் ராபர்ட் போக்சன் (Norman Robert Pogson) இங்கிலாந்த்தில் நாட்டிங்காம் (Nottingham) என்ற இடத்தில் 1829 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் நாள் பிறந்தார். இவரது தந்தை ஜார்ஜ் ஓவன் போக்சன் (George Owen Pogson) உள்ளாடைகள்,  சரிகை விற்பனையாளராகவும் மற்றும் தரகு முகவராகவும் தொழில் செய்து கொண்டிருந்தார். தங்களது பெரிய குடும்பத்தின் வருமானத்திற்கு உதவியாக இருக்கவும், தந்தையின் தொழிலைக் கவனிக்கவும் வேண்டி போக்சன் வணிகவியல் கற்றவே அனுப்பப்பட்டார். ஆனால் போக்சனின் மனமோ அறிவியலையும் கணிதத்

துத்தநாகத் தாதுப் பயன்பாட்டின் - நன்மைகளும் தீமைகளும்

Image
துத்தநாகம் என்னும் உலோகம் நம் அனைவருக்குமே பள்ளிக்கூட நாட்களிலேயே அறிமுகமானதுதான். பள்ளியில் வோல்டா, லெக்லாஞ்சி மற்றும் டேனியல் ஆகிய முதன்மை மின்கலங்களின்அமைப்பு மற்றும் செயல்பாடு குறித்துப் படித்திருப்போம். அவற்றில் எல்லாம் எதிர் மின்வாயாகத் துத்தநாக உலோகத்தண்டு செயல்படுகிறதென்றும் அறிந்திருப்போம். அதனால் துத்தநாகம் பள்ளி நாட்களிலேயே நமக்கு அறிமுகமான உலோகம்தான். சோடியம், பொட்டாசியம், கால்சியம் போன்ற பல உலோகத் தாதுப்பொருட்கள் மனித உடலின் சீரான இயக்கத்திற்கு இன்றியமையாதவை. மேற் சொன்னவற்றைப் போலவே துத்தநாகமும் இன்றியமையாத ஒரு உலோகத் தாதுப்பொருளாகும். நம்முடைய இந்தக் கட்டுரையில் துத்தநாகம் குறித்த பல்வேறு தகவல்கள் தரப்பட்டுள்ளன. முதலில் துத்தநாகத்தாதுடன் தொடர்புடைய உடற் செயல்பாடுகள் என்னென்ன என்பது குறித்துக் காணலாம். 1) மரபணு வெளிப்பாடு (Gene expression), 2) நொதிசார்ந்த எதிர்வினைகள் (Enzymatic reactions), 3) நோயெதிர்ப்புச் செயல்பாடுகள் (Immune function), 4) புரதம் தொகுத்தல் (Protein synthesis), 5) டி.என்.ஏ தொகுத்தல் (DNA synthesis), 6) காயங்களை ஆற்றுதல் (Wound healing) மற்றும் 7) வளர்ச்ச

அறிவியல் பார்வையில் அமில - கார உணவுகள் பகுதி (2)

Image
பகுதி (1) இன் தொடர்ச்சி கட்டுரையின் முதல் பகுதிக்குச் செல்ல https://weyes57.blogspot.com/2020/05/blog-post.html (2) உணவின் அமிலத்தன்மையும் ஆஸ்டியோபோரொசிஸ் எலும்பு நோயும்:   எலும்புத் தாதுப்பொருள் குறைவதால் அதிகரிக்கும் எலும்பு நோயாக ஆஸ்டியோபோரோசிஸ் நோய் வகைப்படுத்தப்படுகிறது. மாதவிடாய் ஏற்படும் பருவத்தைக் கடந்த பேரிளம் பெண்களிடையே இது மிகவும் பொதுவான நோய். இந் நோய் எலும்பு முறிவு அபாயத்தை மிகக் கடுமையாக அதிகரிக்கச் செய்யும். இரத்தத்தின் pH மதிப்பை நிலையாகப் பராமரிக்க, உடலானது எலும்புகளில் இருந்து கால்சியம் போன்ற காரத் தாதுக்களை எடுத்துக்கொள்வதன் மூலம் அமிலத்தை உருவாக்கும் உணவுகளிலிருந்து பெறப்படும் அமிலங்களின் வினை வேகத்தை மட்டுப்படுத்துகிறது. "ஆஸ்டியோபோரோசிஸின் அமில - சாம்பல் கருதுகோள்" ( acid-ash hypothesis of osteoporosis) கோட்பாட்டின் படி, படித்தரமான மேற்கத்திய உணவு (Standard Western Diet) போன்ற அமிலத்தை உருவாக்கும் உணவுகள் எலும்புத் தாது அடர்த்தியில் (Bone mineral density) இழப்பை ஏற்படுத்தும். இந்தக் கோட்பாடு சிறுநீரகங்களின் செயல்பாட்டை  முற்றிலுமாகப் புறக்கணிக்கிறது.

சென்டாரஸ் உடுத் தொகுப்பு (Centaurus Constellation)

Image
எழுதிக் கொண்டிருக்கும் எல்லோருக்கும் நன்கு அறிமுகமான இராசி விண்மீன் தொகுப்புகளை நட்ட நடுவில்  மேஷம், இரிஷபத்துடன் நிறுத்தி  விட்டுத் திடீரென்று, "எல்லாம் கிடக்க கிழவனைத் தூக்கி மனையில் வை" என்பது   மாதிரி சென்டாரஸ் உடுத் தொகுப்பை நான் ஏன் இப்போது எடுக்க வேண்டும் என்ற வினா உங்கள் மனதுக்குள் கண்டிப்பாக இருக்கும்.  தற்போது இரவு சுமார் 8.00 மணி முதல்  தென்கிழக்கு அல்லது தெற்குத் திசையில் கிழக்கு மேற்காக அருகருகில் அமைந்த இரு பொலிவான உடுக்களை வெறும் கண்களால் தொலைநோக்கி அல்லது இருகண் நோக்கி போன்ற கருவிகளின் உதவியின்றி  நம்மால் எளிதில் காண இயலும். அந்த இரு உடுக்கள் ஆல்பா சென்டூரியும் (α - Centauri) பீட்டா சென்டூரியும் (β - Centauri) ஆகும் .   சென்டாரஸ் உடுத் தொகுப்பு தெற்கு வான் அரை கோளத்தில் இருப்பது. ஆகவே நிலநடுக்கோட்டுக்கு வடக்கில் அதிக அட்சங்களில் இருப்பவர்களுக்கு இதனைக் காணும் வாய்ப்பு இல்லை. ஆனால்  நம் சென்னை 12°59' முதல் 13°9' வரையான வடக்கு அட்சத்தில்) நில நடுக்கோட்டுக்கு அருகில் இருப்பதால் குறிப்பிட்ட சில காலங்களில் நமக்குக் கட்புலனாகும் அரிய வாய்ப்பு கிடைத்துள்ளத