Posts

Showing posts from July, 2019

கண்டதும் களித்ததும் - பகுதி 13 (புனே பயணக் கட்டுரைகள்)

Image
பர்வதிக் குன்றுகள் இருநூற்று எழுபது ஆண்டுகளுக்கும் மேலாகப் புனே நகரத்தின் கண்கவர் இடங்களில் ஒன்றாகத் திகழும் இடம் பார்வதி அல்லது பர்வ திக் குன்றுகள் (Parvati Hills).  நாம் பார்வதி என்றழைத்தாலும் உள்ளூர்வாசிகள் பெரும்பாலும் “பர்வதி” என்றே அழைக்கிறார்கள். ஒருவேளை பர்வதராஜ குமாரி என்பதால் பர்வதி என்கிறார்களோ என்னமோ? புனே நகரத்தை கிட்டத்தட்ட முழுமையாக ஒரே கண் வீச்சில் காண விரும்புபவர்களுக்குப் பார்வதிக் குன்றுகள் நல்லதோர் தேர்வாக அமையும் என்பதில் ஐயமில்லை. காரணம் புனே நகரின் இரண்டாவது மிக உயர்ந்த பகுதி இதுதான். கடல் மட்டத்திலிருந்து சுமார் 650 மீட்டர்   அல்லது 2400 அடி உயரத்தில் பார்வதி குன்றின் உச்சி அமைந்துள்ளது. சாலையிலிருந்து 103 படிகள் ஏறிச் செல்ல வேண்டும். படிகள் சரிந்த வாக்கில் மேலேறும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளன.  பர்வதிக் குன்றுக் கோவில் வளாகத்தில் ஆட்சி செலுத்தும் முதன்மைத் தெய்வமான பார்வதி தேவி நோய்களைக் குணப்படுத்தும் வல்லமை கொண்டவள் என்று சொல்லப்படுகிறது. 1740 ஆண்டில், கால் தொடர்பான நோயால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த நானாசாகேப் பேஷ்வாவின் தாயார் ஒருமுற

கண்டதும் களித்ததும் - பகுதி - 12 (புனே பயணக் கட்டுரைகள்)

Image
                                            ஷிண்டே சத்ரி( Shinde Chhatri )                                             பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த மஹத்ஜி ஷிண்டே( Mahadji Shinde ) என்ற மராட்டிய படைத் தளபதிக்காகக் கட்டப்பட்ட நினைவுச் சின்னம் ஷிண்டே சத்ரி ( Shinde Chhatri ). இந்நினைவுச் சின்னம் புனே நகரின் அனைவராலும் நன்கு அறியப்பட்ட வான்வாடி( Wanwadi ) பகுதியில் அமைந்துள்ளது. புனே நகரத்தின் குறிப்பிடத்தக்கதோர் அடையாளமாகவும் மராட்டிய  ஆட்சியை நினைவூட்டும்  வகையிலும் ஷிண்டே சத்ரி அமைந்துள்ளது.                                                     மஹத்ஜி ஷிண்டேயின் உடல் தகனம் செய்யப்பட்டது 1794 ஆம் ஆண்டு பிப்ரவரி 12 ஆம் நாள். தகனம் செய்யப்பட்ட இடத்தைக் குறிக்கும் வகையில் எழுப்பப்பட்டுள்ள நினைவுக்கூடமே ஷிண்டே சத்ரி.  1794 ஆம் ஆண்டில் இந்த நினைவுச் சின்னம் அமைந்துள்ள வளாகத்தில் மஹத்ஜியால் கட்டப்பட்ட சிவாலயம் மட்டுமே இருந்தது. அந்த ஆண்டிலேயே அவர் மரிக்கவும், அவரது இறுதிச் சடங்குகள் அந்த வளாகத்தில் நடத்தப்பட்டன.                                                   

ஆராய்ச்சிகளில் எலிகளை அதிகம் பயன்படுத்துவது ஏன்?

Image
                                அன்றாடம் நாம் உண்ணும் உணவில் கிடைக்கப் பெறாத சத்துக்களின் குறைபாட்டை ஈடு செய்யும் பொருட்டுக் கூடுதலாக எடுத்துக் கொள்ளும்   ஊட்டச்சத்து  நிரப்பி  ( dietary  supplements)  மாத்திரைகள்  முதல்   கே ன்சருக்கான மருந்துகள்  வரை ,  நாள்தோறும் புதிதுபுதிதாகப் பல வகையான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன .    ஆய்வகங்களில் புதிய மருந்துகளைப் பரிசோதித்துப் பார்ப்பதிலாகட்டும் அல்லது பல வியப்பூட்டும் மருத்துவ கண்டுபிடிப்புகளிலாகட்டும் சுண்டெலிகளும் ( Mice ) எலிகளும் ( Rats ) மிக முக்கியமான பங்கை வகிக்கின்றன . உண்மையில் , உயிரிமருத்துவ ஆராய்ச்சி அறக்கட்டளை ( Foundation for Biomedical Research ) சுருக்கமாக எப் . பி . ஆர் ( FBR ) என்றழைக்கப்படும் நிறுவனத்தின் கூற்றுப்படி மேற்படி மருத்துவம் தொடர்பான ஆய்வகங்களில் பயன்படுத்தப்படும் விலங்குகளில் தொண்ணூற்றைந்து (95%) விழுக்காட்டு விலங்குகள் சுண்டெலிகளும் எலிகளும் தான் . அறிவியலாளர்களும் , ஆராய்ச்சியாளர்களும் தமது ஆய்வுகளுக்காகச் சுண்டெலிகளையும் எலிகளையும் பெருமளவில் சார்ந்து இருப்பதற்கு நிறையவே காரணங்கள் உள்ளன . முக