இந்தியாவைப் பொறுத்தவரையில் கர்கரால் (Garga) எழுதப்பட்ட கர்கசம்ஹிதா (Garga Samhitha) சோதிட ஆய்வு நூலில் 3 × 3 மாயச்சதுரத்தைப் பற்றிய முதல் குறிப்பு காணப்படுகிறது . சூரியன் , சந்திரன் , புதன் , செவ்வாய் , சுக்கிரன் , வியாழன் , சனி , ராகு , கேது ஆகிய நவக்கிரகங்களை யும் சாந்தி செய்ய 3 × 3 மாயச்சதுரத்தைப் பயன்படுத்த கர்கசம்ஹிதா வில் கர்க மகரிஷி பரிந்துரை த்துள்ளார் . இந்த ஆய்வு நூலின் பழமையான பதிப்பு பொதுயுகம் 100 ஆம் ஆண்டைச் சேர்ந்தது . ஆனால் கிரகங்கள் குறித்த பத்தியை அலக்ஸாண்டரின் படையெடுப்பு நிகழும் முன்னர் , அதாவது 400 CE க்கு முன்பே எழுதியிருக்க வாய்ப்பில்லை. பொதுயுகம் 900 மாவது ஆண்டு வாக்கில் சித்தயோ க்(Siddhayog) என்ற மருத்துவப் புத்தக ம் விரிந்தா மாதவா (Vrinda Madhava) என்பவரால் எழுதப்பட்டது. இப்புத்தகத்தில் கருவுற்றிருக்கும் பெண்களுக்கு எளிதாகப் பிரசவம் நிகழ 3 × 3 மாயச் சதுரத் தை பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதையே மாயச் சதுரங்களின் காலக் கோட்டுத் தொடக்கமாக எடுத்துக் கொள்ளலாம். நான்குக்கு நான்கு (4X4) மாயச் சதுரம் அல்லது நான்காவது வரிசை மாயச் சதுரம் (Fourth order magic
Posts
Showing posts from July, 2021