Posts

Showing posts from February, 2019

வாஸ்துப் பிரச்சனை

Image
என் வீட்டருகில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு. அதில் ஒரு வீட்டின் ஒரு அறையின் சன்னல் என் இல்லத்தின்  மாடி அறைக்கு நேர் எதிரில் உள்ளது.  என் வீட்டில் அந்த அறையின் சன்னலில் பத்தாண்டுகளுக்கு முன்பு சன்னல் குளிர் பதனி ( window AC) பொருத்தியிருந்தேன். அப்புறம் 2016 ல் அதை மாற்றி பிரிக்கப்பட்ட குளிர்பதனி (Split AC) பொருத்தினேன். இந்த பணியை ஒரு ஒப்பந்தக்காரர் என் வீட்டை புதிப்பிக்கும் போது ஒரு அவரது செலவில் செய்து தந்தார். அப்போது சன்னல் குளிர்பதனி எடுத்த பின்னர் அந்தத் திறப்பை மூடத் தேவையான இரும்புக் கிரில் மற்றும் கண்ணாடி ஆகியவற்றையும் மாற்றினார். வீட்டில் பெரும்பாலும் நானும் மனைவியும் மட்டுமே. அதனால் மாடியில் அதிகம் நாங்கள் புழங்குவதும் இல்லை. பொதுவாக விருந்தினர்கள் அல்லது என் மகன்/மகள் வீட்டுக்கு வரும் போது மட்டுமே பயன்படுகிறது அந்த மாடி அறை என்பதால் சன்னலைத் திறப்பதே அபூர்வம்.  சன்னலுக்கு அதிக வெளிச்சம் காரணமாகவும் புறாக்கள் தொந்தரவு காரணமாகவும் சன்னல் திரை எப்போதும் போட்டே இருக்கும். பணிகள் முடிந்த பின்னர் நானும் அது என்ன வகைக் கண்ணாடி என்று பார்க்கவில்லை. ஒருநாள் அந்

மைக்கேல் ஜாக்சனும் மரணமும்

Image
இந்தக் கட்டுரை யாரோ வாட்ஸ் ஆப்பில் எழுதிய  ஆங்கில கட்டுரையை அதன் பொருட் சுவைக்காக தமிழாக்கம் செய்து பதிவிடப்படுகிறது. ஆங்கிலத்தில் பதிவிட்ட அந்த மூல ஆசிரியருக்கு மனமார்ந்த நன்றி.   மைக்கேல் ஜாக்சன் நூற்றம்பது ஆண்டுகள் வாழ ஆசைப்பட்டார். இதன் பொருட்டு தன்னைப் பாதாதி கேசம் அனுதினமும் பரிசோதிக்க பனிரெண்டு மருத்துவர்கள் கொண்ட ஒரு குழுவை நியமித்து வீட்டோடு வைத்திருந்தார். அவர் உண்ணும் உணவுகள் சோதனைச்சாலையில் பரிசோதிக்கப்பட்ட பின்னரே பரிமாறப்பட்டன. இது தவிர இன்னொரு பதினைந்து நபர்கள் கொண்ட மற்றொரு நிபுணர் குழுவொன்று அவரது தினசரி உடற்பயிற்சி மற்றும் அன்றாடச் செயல்பாடுகளைக் கவனித்துக் கொள்ள இருந்தது. அவரது படுக்கை உறங்கும் போது ஆக்ஸிஜன் அளவைச் சீராக வைத்திருக்கும் அதி நவீன தொழில் நுட்பக் கருவிகள் இணைக்கப்பட்டதாக இருந்தது. இதற்கெல்லாம் ஒருபடி மேலே எப்போது தேவைப்பட்டாலும் உடனே உடல் உறுப்புகளை தானம் கொடுக்கவென பல உடல் உறுப்பு தானம் செய்வோரும் இருந்தனர். இந்த தானம் செய்பவர்கள் அனைவரையும் மைக்கேல் ஜாக்சனே பராமரித்து வந்தார். இப்படியாகப் பட்ட மிக நுட்பமாக வடிவமைக்கப்பட்ட திட்டத்துடன் நூற்றம

வெற்றி பெற்றும் தோற்றவன்

பள்ளியில் படிக்கும் காலத்தில் படிப்பில் படு சூட்டிகையாக விளங்கிய மாணவன் ஒருவனைப் பற்றிச் சொல்லப் போகிறேன். அவன் என்று குறிப்பிடுவதில் பல சௌகரியங்கள் உள்ளதால் பெயரில்லாமலேயே கதாநாயகனைப் பற்றிப் பேசுவோம். பள்ளியில் நடக்கும் எல்லாத் தேர்வுகளிலும் கணக்கிலும் அறிவியலிலும்  அவன் 100/100 பெறத் தவறியதே இல்லை. இந்திய தொழில் நுட்பக் கழகம் அதாவது நாம் ஐ.ஐ.டி என்று சொல்கிறோமே அந்தக் கல்வி நிறுவனத்தில் தேர்வு எழுதி மிகச் சிறந்த மதிப்பெண் பெற்றுத் தேர்வாகி சென்னை ஐ.ஐ.டி யில் சேர்ந்தான். அடுத்து அங்கே இளநிலைக் கல்வி கற்ற பின் வணிக நிர்வாகத்தில் முதுநிலைப்பட்டம் அதுதான் எம்.பி.ஏ வை அமெரிக்காவில் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் முடித்தான். அமெரிக்காவிலேயே கொழுத்த சம்பளத்தில் வேலையும் கிடைக்கவே அங்கே குடியேறினான். அப்புறம் நல்ல அழகான தமிழ் நாட்டுப் பெண்ணை மணந்து கொண்டு இனிய இல்லறம். வாழ்வில் அடுத்த கட்டத்திற்கு முன்னேறியவன் ஐந்து படுக்கையறை வீடும் விலையுயர்ந்த சொகுசு காரும் வாங்கினான். எல்லாம் இப்படியாக நல்லபடியாகவே போய்க்கொண்டுதான் இருந்தது. திடிரென சில ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள் தன் மனைவி