பிறந்த மண் வாசம் - (4) திரு.கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி
கல்லிடைக்குறிச்சி அய்யா நீலகண்ட சாஸ்திரி
ஒரு இந்திய வரலாற்றாளர் மற்றும் திராவிடயியலாளர். இவர் தென் இந்திய வரலாற்றாளர்களுள் குறிப்பிடத்தக்கவராவார். நீலகண்ட சாஸ்திரி அவர்கள் 1892 ஆகஸ்டு 12 ஆம் நாள் திருநெல்வேலி மாவட்டத்தில்
உள்ள கல்லிடைக்குறிச்சியில் ஒரு ஏழை பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். நெல்லை
ம.தி.தா. இந்து கல்லூரியில் இடைநிலை வகுப்பை (FA) முடித்து விட்டு மேற்படிப்பைச்
சென்னை தாம்பரம் கிருத்துவக் கல்லூரியில் தொடர்ந்தார்.
முதுகலைப் பட்டத்தில்
(எம்.ஏ) சென்னை மாநிலத்திலேயே முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றார். 1913 முதல் 1918
வரை ம .தி.தா.இந்துக் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிபுரிந்தார். 1918-20 காலகட்டத்தில்வாரணாசியில்
உள்ள இந்து பல்கலைக்கழகத்தில் வரலாற்றுப் பேராசிரியராக பணியாற்றினார். அதன் பின்பு அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
புதிதாகத் தொடங்கப்பட்டதும் அதன் கலைக்கல்லூரியின் முதல்வராகப் பொறுப்பேற்றார். பின்னர்
1929 ல் திருச்சி நேஷனல் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்தார். அதே ஆண்டு சென்னைப்
பல்கலைக் கழகத்தில் வரலாறு மற்றும் தொல்லியல் பேராசியராக பதவியேற்று 1946 வரை
பணிபுரிந்தார்.
1952 முதல்
1955 வரை இந்தியவியல் பேராசிரியராக மைசூர் பல்கலைக் கழகத்தில் பணியாற்றினார்.
1954 ல்மைசூர் மாநிலத்தின் தொல்லியல் துறையின் கெளரவ இயக்குனராக நியமிக்கப்பட்டார். 1950
களின் ஆரம்பத்தில் அகில இந்திய கீழைத்தேய மாநாட்டின் தலைவராக இருந்தார். 1957
-1972 வரை இவர் யுனெஸ்கோவின் தென்னிந்தியப் பாரம்பரிய கலாச்சார நிறுவனத்தின் இயக்குனராகப்
பணிபுரிந்தார். 1957ல் இவருக்கு பத்ம பூஷண் விருது (இந்தியப் பொதுமக்களுக்கு
அளிக்கப்படும் மூன்றாவது உயரிய விருது) அளிக்கப்பட்டது. 1959 ல் கோடைப்பருவத்தில்சிக்காக்கோ
பல்கலைக்கழகத்திற்குச் சென்று தென் இந்திய வரலாறு பற்றிப் பல சொற்பொழிவுகள்
ஆற்றினார். இவர் 1975 ஆம் ஆண்டு ஜூன் 15 ஆம் நாள் காலமானார்.
புகழ் பெற்ற வரலாற்றாளர்
ஆர். எஸ். சர்மா, க. அ. நீலகண்ட சாஸ்திரி ஒரு மீட்டுருவாக்குபவர் (revivalist) அல்லர்
என்றும் அவரது புத்தகம் தென்னிந்திய வரலாறு ஆதாரப்பூர்வமானது என்றும் கூறியுள்ளார்.
தமிழ் வரலாற்றாளரான ஆ.இரா. வெங்கடாசலபதி இவரைத் தமிழ் நாட்டின் சிறந்த வரலாற்றாளராக
கருதுகிறார்.
தகவல்கள் நன்றி: விக்கிபீடியா தமிழ்.

Age of the Nandas and Mauryas, K. A Nilakanta Sastri
முதலில் இந்நூலை வாசித்துவிட்டு ரொமீலா
தாப்பரின் நூலை வாசிக்க வேண்டும். இந்நூலின் சில இடைவெளிகளை நிரப்புகிறார் என்ற
அளவில் மட்டுமே ரொமீலாவின் நூல் முக்கியமானது. அசோகர் காலத்தில் அவருடைய
சாம்ராஜ்யத்துக்குள் அடங்கிய குறுநில மன்னர்களின் அமைப்பைப்பற்றி அவர்கள் நிர்வாகம்
செய்யப்பட்ட முறைகளைப் பற்றி அந்த பேரரசின் கட்டுமானம் பற்றி நீலகண்ட சாஸ்திரிக்கு
கருத்துக்கள் இல்லை. அவற்றை ரொமீலா ஆராய்கிறார். ஆனால் சாஸ்திரி அசோகர் காலத்து
தொல்பொருள் சான்றுகளை சீராக தொகுக்கிறார்
தென்னிந்திய வரலாறு கே.ஏ.நீலகண்ட
சாஸ்திரி
பல பகுதிகளாக விரிவாக எழுதப்பட்ட இந்நூல்
தென்னிந்தியவரலாற்றை ஒன்றுடன் ஒன்று கோர்த்து விரிவான வரைபடமாக அளிக்கிறது.
சோழர்கள்: கே.ஏ.நீலகண்ட
சாஸ்திரி .
தமிழில் தமிழ்நாடு பாடநூல் நிறுவனம்
கல்கிக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்த நூல். இன்றும் தமிழ் வரலாற்று எழுத்தில் ஒரு
கிளாஸிக் இது.
The PandyanKingdom: From the Earliest Times to the Sixteenth Century K.
A. Nilakanta Sastri இந்நூல் சுருக்கமாக தமிழில் வெளிவந்திருக்கிறது. பாண்டிய
வரலாற்றை அறிவதற்கான தரப்படுத்தப்பட்ட வரலாற்று ஆவணம் இது
இவர் தென்னிந்திய
வரலாறு பற்றி 25 நூல்கள் எழுதியுள்ளார்.
·
The Pāṇḍyan Kingdom from the
Earliest Times to the Sixteenth Century. Luzac. 1929.
·
Studies in Chola history and
administration. University of Madras. 1932.
·
The Cholas.
University of Madras. 1935.
·
A comprehensive history of India.
Orient Longman. 1936.
·
Historical method in relation to
problems of South Indian history.. University of
Madras. 1941.
·
Gleanings on social life from
the Avadanas. Indian Research Institute. 1945.
·
Further sources of Vijayanagara
history. University of Madras. 1946.
·
The Tamil kingdoms of South
India. The National Information & Publications. 1948.
·
South Indian Influences in the
Far East. Hind Kitabs. 1949.
·
History of Sri Vijaya.
University of Madras. 1949.
·
A History of South India from
Prehistoric Times to the Fall of Vijayanagar: from prehistoric times to the
fall of Vijayanagar. Oxford University Press. 1955.
·
Historical method in relation to
Indian history. 1956.
·
A Comprehensive History of India.
Orient Longman. 1957.
·
Development of religion in South
India. Orient Longman. 1963.
·
The Culture and History of the
Tamils. K. L. Mukhopadhyay. 1964.
·
Sources of Indian history with
special reference to South India. Asian Publishing
House. 1964.
·
A great liberal: speeches and
writings of Sir P. S. Sivaswami Aiyar. Allied Publishers.
1965.
·
Life and culture of the Indian
people: a historical survey. Allied Publishers. 1966.
·
Cultural Contacts Between Aryans
and Dravidians. Manaktalas. 1967.
·
Age of the Nandas and Mauryas.
Motilal Banarsidass. 1967.
·
An Advanced history of India.
Allied Publishers. 1971.
·
Foreign Notices of South India:
From Megasthenes to Ma Huan. University of Madras. 1972.
·
Sangam literature: its cults and
cultures. Swathi Publishers. 1972.
·
Aspects of India's history and
culture. Oriental Publishers. 1974.
·
South India and South-East Asia:
studies in their history and culture. Geetha Book House
(Mysore). 1978.
என்ற தென்றல் இணையப் பத்திரிக்கையில்
திரு. மதுசூதனன்.தெ அவர்களின் கட்டுரை இன்னமும் அதிக தகவல்களைத் தருகிறது.
திரு. கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி அவர்களின் 124 வது
பிற்ந்த தினம் இன்று.
Comments
Post a Comment